tamilnadu

img

ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் மாவட்டம் முழுவதும் நடைபயணம்

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

தருமபுரி, மே 7- காவிரி ஆற்றில் வரும் உபரிநீரை  தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி,  குளங்களில் நிரப்பி மாவட்ட மக்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட்  8, 9 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் நடைபயணம் நடைபெற உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்திற்கும், நிதி ஒதுக்கி உடனடியாக அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட ஆயத்த மாநாடு தருமபுரி, பெரியார் மன்றத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். தருமபுரி ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி வரவேற்புரையாற்றினார்.

இதில் சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகை யில், இம்மாவட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் 100 நாள் வேலையை நம்பி மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், 100 நாள் வேலைக்கான நிதியை ஒன்றிய மோடி அரசு தற்போது குறைத்துள் ளது. முறையாக 100 நாள் வேலை யும் கிடைப்பதில்லை. அதேபோல், மகளிர் சுய உதவிக்குழுக்களில் வழங்கும் கடன்களை திரும்பக் கட்டு வதில், பெரும் பிரச்சனையை மக்கள்  சந்தித்து வருகின்றனர். இதற் கிடையே நுண்நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவி கடனை வசூலிப்ப தில் அடாவடி போக்கை கடைப் பிடித்து வருகின்றனர். இதனால் பெரும்பான்மையான மக்கள் வேலை தேடி வெளி மாநிலங் களுக்கு செல்கிற அவலநிலை ஏற்பட்டு வருகிறது.  இதையெல்லாம் கண்டு கொள்ளாத மோடி அரசாங்கம் தற்போது 100 நாள் வேலைக்கான நிதி யை குறைத்து, பெரும் பணக்காரர் களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு கடன் பெற்றவர்கள் எல்லாம்  ரூ.5 கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி  வரை கடன் வாங்கிய பெரும் முத லாளிகள். தள்ளுபடி பெற்றவர்களில் உலகப்பெரும் பணக்காரர்களில் நான்கு பேர் இந்தியர்களாக உள்ள னர். ஆனால், விவசாயிகள் பயிர்க் கடனோ அல்லது டிராக்டர் கடனோ வாங்கியிருந்தால் அவர்களின் இடத்தையும், வீட்டையும் ஜப்தி செய்கிற வேலையை மோடி அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தலை சந்திக்க மோடி அரசாங்கம் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகிறது. இலவசங்கள் கொடுப்பது தவறு என பேசிய மோடி யின் கட்சி, கர்நாடகத்தில் இலவசங் களை வாரி இறைக்கிற வேலையை யும் செய்து வருகிறது. ஆனால் நிச்சயம் கர்நாடக தேர்தலில் பாஜக வெல்லப்போவதில்லை. அதேபோல் 2024 தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. தற்போது எப்படியாவது தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாஜக அரசாங்கம், மணிப்பூரில் பெரும் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. இதில், இதுநாள் வரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் கேரளத்தில், “கேரளா ஸ்டோரி” என்ற ஒரு படத்தை தயாரித்து, அதில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வெளி யிட்டுள்ளனர். இப்படி அம்மாநிலத்தில் மோதலை உருவாக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டின் ஆளுநர் தன்னை ஒரு எதிர்க்கட்சி தலைவர் போல் பாவித்துக்கொண்டு, தொடர்ந்து பொய் கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும், ஆளுநர் பாஜக-ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தங் களை உள்வாங்கிக் கொண்டே செயல்பட்டு வருகிறார். இது ஜன நாயகத்திற்கு எதிரானது. 

கடந்த 10 ஆண்டு கால அதிமுக அரசு கஜானாவை முழுமை யாக காலி செய்துவிட்டு, சென்ற நிலையில் இன்றைக்கு திமுக அர சாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு  ஆண்டுகளை நிறைவு செய்திருக் கிறது. கஜானா காலியான நிலை யிலும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முறையாக நிதி ஒதுக்காத நிலையிலும் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும், இன்றைக்கு வேலைவாய்ப்பில் ஒப்பந்த முறையில் அனைத்து துறைகளிலும் பணியாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். இந்த ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு, நிரந்தர பணியாளர்களாக அவர்களை நியமிக்க வேண்டும். இதேபோல் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்ற முயல வேண்டும். அதில் ஒன்றுதான் காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டமாகும். எனவே, காவிரி உபரிநீர் திட்டத்திற்கு நிதியை ஒதுக்கி, உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 8, 9 ஆகிய தேதிகளில் ஒகேனக்கலில் இருந்து தருமபுரி வரை நடைபயணம் நடைபெறும்.  இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இம்மாநாட்டில். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், பி.டில்லி பாபு, மூத்த தலைவர் பி.இளம்பருதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ரா.சிசுபாலன், சோலை.அர்ஜூனன், கிரைஸாமேரி, மல்லிகா, வி.ரவி, ஆர்.சின்னசாமி, எம்.முத்து, சி.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.