tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளை அவமதிப்பதா? கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ஈரோடு, டிச.30- மாற்றுத்திறனாளிகளை அவம தித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து கோபி கோட் டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திற னாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத் தில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி யாற்றும் மாற்றுத்திறனாளிகள் அர சாணைக்கு எதிராக 8 மணி நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு வரு கின்றனர். இதுதொடர்பாக பவானி சாகர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதி காரிகளிடம் மாற்றித்திறனாளிகள் நலச் ்சங்கத்தினர்  நேரில் முறையிட்டுள்ள னர். அப்போது, ஊராட்சி மன்ற தலை வர் மற்றும் அதிகாரிகள்,  மாற்றுத்திற னாளிகளின் சங்கத் தலைவர்களை தரக்குறைவாகவும், அச்சுறுத்தும் வகையிலும் மிரட்டியதாக கூறப்படு கிறது.

இதனை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வியா ழனன்று கோட்டாட்சியர் அலுவலகத் தில் குடியேறும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத் தின் மாநில செயலாளர் பி.ராஜேஷ் தலைமை வகித்தார். இதில், ஈரோடு மாவட்ட தலைவர் கே. பாலு, மாவட்ட உதவித்தலைவர் பி.மாரிமுத்து, முன் னாள் மாவட்ட செயலாளர் டி.சுப்பிர மணி, மாவட்ட பொறுப்பு செயலாளர் ஆர்.சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இப்போராட்டத்தை தொடர்ந்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவ லர், நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், இனி ஒருபோதும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது என உறுதியளித்தார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட் டுமே வேலை கொடுக்கப்படும்.  அவர் களுக்கு 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்கப்படும் எனவும் உறுதி யளித்தார். இதைத்தொடர்ந்து போராட் டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.