tamilnadu

img

மனிதக் கழிவை கலந்தவர்களை உடனடியாக கைது செய்க!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவர்களை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர். (செய்தி : 3)