tamilnadu

img

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த தலைவர்களின் படம் திறப்பு

சென்னை, ஏப். 21 - விவசாயத் தொழிலாளர்களின் விடி யலுக்காக களம் கண்ட தோழர் சுனீத் சோப்ரா, விவசாயிகள் - விவசாயத் தொழி லாளர்களின் போராட்டப் பாதையில் புதிய  திருப்பங்களை கண்ட மகத்தான தலை வர்கள் தோழர்கள் கே.வரதராசன் - ஜி.மணி ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும்  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் வெள்ளி யன்று (ஏப்.21) நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் தோழர் சுனீத் சோப்ரா படத்தையும், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தோழர் கே.வரதராசன் படத்தையும், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் தோழர் ஜி.மணி படத்தையும் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் பேசினர்.