tamilnadu

சட்டவிரோத கருக்கலைப்பு: இருவர் கைது

கள்ளக்குறிச்சி, மார்ச் 22- சட்டத்திற்கு புறம்பாக கருக்க லைப்பு செய்து பெண் இறந்த வழக்கில் இரண்டு நபர்கள் ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து சிறை யில் அடைத்தனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி  கள்ளக் குறிச்சி மாவட்டம், சங்கரபுரம் தாலுக்கா, கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர்க்கு அதே ஊரில் உள்ள தனி யார் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த போது அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டு இறந்து விட்டார். இந்த வழக்கில் மருந்து கடையின் உரிமையாளர் முத்துகுமாரி,  கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த கவிதா  ஆகிய இருவரும் ரிஷிவந்தியம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதை யடுத்து இருவரும் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.