tamilnadu

img

சிலையாகும் மரங்கள் - காயத்ரி சுவாமிநாதன்

“மண்ணை மறக்காதத் தன்மை
மேலே மேலே செல்லும் அவா,
சூரியனோடு கை கொடுக்கும் தோழமை”

என்று சுந்தரராமசாமி மரத்தின் பெருமையைப் பற்றிக்  கூறுகிறார்.ஓரிடத்தில் நிலையாக நிற்பது என்று தான்  மரத்தைப் பற்றிப் புரிதல் நமக்குள் உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் விண்ணோடும் மண்ணோடும், ஏன்  ஐம்பூதங்களோடுத் தொடர்புடைய ஒரே உயிர் மரங்க ளும் செடிகளும் மட்டும் தான். இயற்கையை தமிழ்  சமூகம் அளவிற்கு புரிந்து கொண்டவர்கள் வேறு யாரு மில்லை.இவ்வுலகில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன.சிந்து சமவெளி நாகரிகம், நைல் நாகரிகம்,சுமேரிய நாகரிகம்,கீழடி நாகரிகம் என பண்டை நாகரிகங்களைப் பற்றி பல்வேறு செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை அச்சத்துடன் பார்க்காமல் தோழமை யுடன் பார்த்து, வாழ கற்க வேண்டும். அதற்கு சில  எடு்த்துக்காட்டுகள் உள்ளன. இவ்வுலகம் என்பதை யாரோ ஒருவர் படைத்தார், என்றல்லாது ஜம்பூதங்க ளின் சேர்க்கை தான் உலகம். “மண் திரிந்து நிலனும்”  என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது. அறிவியல்  உலகம் கண்டறிந்த மிகப்பெரிய ஒன்று ஆய்வகக்  கருவிகள். ஒரு மரத்தை கட்டைத் துண்டாகவும்,சில்லித் துணுக்குகளாகவும் பகுத்துக் கொண்டே சென்று கடைசியில் ஒன்றும் இல்லை என்று பொருள் வடிவில் முடிக்கிறது அறிவியல் மனம்.ஆனால்,ஒரு மரத்தைத்  தனது உடன்  பிறப்பாக இன்ப துன்பங்களில் பங்கெடுக்  கும் தோழனாகப் போற்றுகிறது தமிழர் மனம்.இயற்கை யைப் பாதுகாப்பது மனித இனத்தை பாதுகாப்பது  போன்றதே ஆகும். உலகத்தில் உள்ள அனைத்து  உயிரினங்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. மாறி வரும்  சுற்றுச்சூழலால் உலகம் எத்தகைய அபாயத்தை எதிர்  நோக்க இருக்கிறது என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. தேவையில்லாமல் பல வரு டங்களாக வாழும் மரங்களை நாமே அழிக்கின்றோம்.நான் எப்போதும் இயற்கையுடனே பயணித்துக் கொண்டிருப்பவள்.மரங்களை வெட்டும்போது என் நெஞ்ம் பதைபதைக்கிறது. பூமியைக் காப்பாற்ற மரங்க ளால் மட்டுமே முடியும். நம் முன்னால் மரங்கள் எங்கும்  தென்படுவதால்,அவை எவ்வளவு அற்புதமானவை என்பதைப் பற்றி நாம் எப்போதும் யோசிப்பதில்லை. யோசிக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை.

பட்டுப்போன மரங்களில் சிற்பம்

பல இடங்களில்  மரங்களை அமிலம் ஊற்றி அழிக்க  முயற்சி நடைபெறுகிறது. இதனால் பல மரங்கள் பட்டு போய் காணப்படுகிறது.ஒரு சில மரங்கள் பூச்சி களால் பட்டுப்போயிருக்கிறது அல்லது சேதமாகிறது.வெளிநாடுகளில் ஒரு பெரிய சிற்பம் செய்து பராம ரிப்பார்கள். புது முயற்சியாக சமீபத்தில் ஒன்றைப் பார்த்தேன்.எனது சொந்த ஊர் திருவண்ணாமலை.நெடுஞ்சாலைகளில் உள்ள மரத்தை எளிதாக அகற்று வதுப்போல,எங்கள் ஊரில் மலைச் சுற்றும் பாதையில் பல்வேறு உயிரினங்களுக்கு நிழல் அளிக்கும் மரங்க ளையும் சாலை விரிவாக்கம் என்றப் பெயரில் மரங்களை  வெட்ட ஆரம்பித்தபோது,எங்கள் ஊரில் இருக்கும் அனைத்து அமைப்பினரும் எதிர்த்துக் குரல் கொடுத்த னர். அதன் காரணமாக மரங்கள் தற்போது உயிப் பெற்று வாழ்கிறது.பிறகு,எங்கள் ஊரில்  பட்டுபோய் உள்ள 62 மரங்களில் இப்போது மர சிற்பங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். இதில் இயற்கை காட்சி, பறவை கள்,விலங்கினங்கள் என பல்வேறு விதமான வடி வத்தை மரச் சிற்பங்களாகச் செதுக்கி இன்று அழகூட்டு கிறது.இவையெல்லாம் மரங்களைத் துண்டுகளாக வெட்டி வைத்து,செதுக்குவது அல்ல.நிற்கும் மரத்தில் அப்படியே அவற்றின் அகலம்,நீலம் ஆகிய வற்றைக் கொண்டு எந்தவகையான சிற்பம் செதுக்கி னால் பார்க்க நன்றாக இருக்கும் என்றும் திட்ட மிட்டு,அது மட்டுமல்லாமல் அதற்கேற்ப சிற்பங்கள் செதுக்கப்படுகிறது. தமிழ கத்தில் எங்கள் ஊரில் வைத்  தது தான் முதல் முறை யாகும்.மேலும்,இதற்கு பெரும்பாலும் பணத்தைச் செலவழிக்க மாட்டார்கள்.ஒரு மர சிற்பம் செய்ய ஒரு  வாரமாவது ஆகும்.இங்கே  பல விதமான வகையான மர சிற்பங்கள் எங்கள் ஊரின் மலைச்சுற்றும் பாதையில்  தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள் ளது. 

அணில் சிற்பம்(வேப்ப மரம்) 
ஒட்டகச் சிவிங்கி,பறவை(புளிய மரம்)
மயில்,செல்லும்,முதலை,டால்பின்,
வாட்ச்,பூ வகைகள்,நூலகம்,இறகுகள்.

மரங்களை வீணாக்காமல் இதுபோன்ற அறிவு றுத்தும் வகையில் சிற்பம் செதுக்கலாம்.காய்ந்துப் போன மரத்தை அகற்றினால் விறகிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.வேறு எதற்கும் உதவாது. ஐரோப்பிய நாடுகளில், மேலை நாடுகளில் மற்றும்  வட அமெரிக்க தென் அமெரிக்க நாடுகளில் சாலை யோர மரங்கள் ஏதாவது பட்டுப்போனால், சிற்பங்க ளாகவும், சாலையோர இருக்கைகளாகவும் மாற்றி யுள்ளனர்.இயற்கை சார்ந்த ஆரோக்கியமான சமூ கத்தை நோக்கி எல்லோரும் முன்னேறலாம்.இயற்கை  கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்துவிட்டது.ஆனால், இயற்கை என்ற ஒன்று எப்பொழுதுமே புதி தாக வென்று மனிதனைப் பார்த்துச் சிரிக்கிறது. எனவே, மரங்கள் பட்டுப்போனாலும் நாம் உயிர்ப்புடன்  மாற்ற வேண்டும். இனி வரும் காலங்களில், இது போன்ற பட்டு போன மரங்களை வெட்டி அகற்றா மல், அந்த மரங்களுக்கு கலை சிற்பங்கள் மூலம் உயிர்க்  கொடுப்போம். இதுபோன்ற முயற்சியை பின்வரும் காலங்களில் செய்தால் நன்றாக இருக்கும். நம் முன்னோர்களின் இயற்கை அறிவைக் கொண்டாட அடுத்தத் தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டி யது நமது எல்லோரின் கடமையாகும்.