tamilnadu

img

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்; பணீந்திரரெட்டி புதிய உள்துறைச் செயலர்

சென்னை, ஜூன் 12- தமிழகத்தின் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஏற்கனவே கூட்டு றவு, உணவு நுகர்வோர் பாது காப்புத் துறையின் கூடுதல்  தலைமைச்  செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி புதிய உள்துறை செயலாள ராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக  இருந்த எஸ்.கே பிரபாகர்  வருவாய் நிர்வாக ஆணை யராக நியமிக்கப்பட்டுள் ளார். அதேபோல் தமிழ கத்தின் முந்தைய ஆட்சி யிலும் தற்போதைய ஆட்சியிலும் சுகாதாரத்துறை செய லராக பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் கூட்டு றவு, உணவு நுகர்வோர் பாது காப்புத்துறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.  மருத்துவத்துறையின் புதிய செயலாளராக கு.செந்தில்குமார் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். திருச்சி  மாவட்ட ஆட்சியராக இருந்த  சிவராசு, கோவை வணிக  வரித்துறை இணை ஆணை யராக மாற்றப்பட்டுள்ளார். வணிக வரித்துறை முதன்மை செயலாளர், ஆணையராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தின் ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றம் செய் யப்பட்டுள்ளார். சென்னை  மெட்ரோ ரயில் லிமிடெட் டின் முதன்மை செயலா ளர் பிரதீப் யாதவ் மாற்றப் பட்டுள்ளார். நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை முதன்மை  செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.