tamilnadu

img

மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமது அறிக்கையில்,  ஜனவரி 8 அன்று பொதுத்துறை சங்கங்கள் நடத்த உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றி அதனை முதலாளிகளுக்கு ஆதரவு சட்டமாக உருவாக்குவதை நிறுத்த வேண்டும் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பொதுத்துறை சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் மாபெரும் அளவில் வெற்றி பெறச்செய்திட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

;