tamilnadu

img

வாகனங்களை சேதப்படுத்தக்கூடாது மனித உரிமை ஆணையம் கண்டிப்பு

சென்னை, ஏப்.9- ஊரடங்கை மீறி வெளியில் வருபவர்க ளின் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத் தும்படி, தலைமைச் செயலாளரை தமிழ்நாடு  மாநில மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் ஜெயசந்திரன், உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் ஆகியோர், தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், “கொரோனா பாதிப்பைக் கண்டறியவும், பரவுவதை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  கொரோனாவை தடுக்க சுகாதாரமான முறை யில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதுமான தண்ணீர் விநியோகம் இல்லாமல் சுகாதாரம் என்பது வாய்ப்பே இல்லை என்பதால் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். தூய்மைப் பணியா ளர்கள், காவல்துறையினர் பணி முடித்து வீடு  திரும்பும் முன், குளிக்கவும், உடை மாற்றிக்  கொள்ளவும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் குடும்பத்தி னருக்கு கொரோனா பரவும் அபாயம் நீங்கும் என பரிந்துரைத்துள்ளனர்.

ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், ரேஷன் அட்டை இல்லாத வெளிமாநில தொழி லாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். சிறைகளில் உள்ள கைதிகளைத் தனிமைப்படுத்தி வைக்க  வேண்டும். ஊரடங்கை மீறி வெளியில் வருப வர்களின் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல்துறையின ருக்கு அறிவுறுத்த வேண்டும். வன்முறையில் ஈடுபடும் காவலர்களைக் கண்டிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பாக காவல்துறை, சிறைத் துறை,  பொது விநியோகத் துறை, குடிநீர் வழங்கல் வாரியம் ஆகியன 10 நாள்களுக்குள் அறிக்கை  சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள் ளது.

;