அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படும், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் முருகன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.