சனா,நவ.20- செங்கடலின் தெற்கு பகுதியில் பய ணித்துக் கொண்டிருந்த கேலக்சி லீடர் என்ற இஸ்ரேலுக்கு தொடர்புடைய சரக்குக் கப்பலை ஏமனில் செயல் பட்டு வரும் ஹவுதி அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் வழியில் கைப்பற்றப்பட்ட கப்பல் குறித்து வீடியோ ஒன்றை வெளி யிட்டுள்ள ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரீ, “காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள நமது பாலஸ்தீன சகோதரர் களுக்கு எதிரான கொடூரமான செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சரக்குக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது” என்றார். மேலும் அவர் “சர்வதேச சமூகம் பிராந்திய பாதுகாப்பு மற்றும் அதன் உறுதித்தன்மை பற்றி அக்கறை கொண்டிருந்தால், போரை விரிவு படுத்துவதை விட, காசாவிற்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்” என்றும் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏமனின் வடக்கு பகுதி மற்றும் அதன் செங்கடல் கடற்கரையை கட்டுப் பாட்டில் வைத்துள்ள ஹவுதி அமைப்பி னர் தாங்கள் கைப்பற்றியது இஸ்ரே லின் கப்பல் என தெரிவித்துள்ளனர். அந்த கப்பல் பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் அந்த நிறு வனத்தின் தலைவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இஸ்ரேலின் ஹீப்ரூ மொழி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கேலக்சி லீடர் சரக்குக் கப்பலில் உக்ரைன், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் பல்கேரியா போன்ற நாடு களைச் சேர்ந்த சுமார் 25 பேர் இருப்பதாக வும் கப்பலில் ஒரு பங்கு இஸ்ரேல் தொழிலதிபருக்கு சொந்தமானது என்றும் பஹாமஸ் கொடியுடன் கப்பல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது
இஸ்ரேல்-காசா போரில் ஹவுதி அமைப்பு
அக்டோபர் 7 முதல் இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி யுள்ளது. மேலும் கடந்த வாரம், தங்கள் கடல் எல்லைக்குள் ஊடுருவினால் இஸ்ரேல் கப்பல்களை குறிவைத்து தாக்க முடியும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.தற்போது இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பலாக இருந்தாலோ அல்லது ஆதரவு கப்ப லாக இருந்தாலும் ஹவுதி அமைப்பின் படைகளுக்கு சட்டப்பூர்வமான இலக்காக இருப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஹவுதி தொடர்பாளர் சாரீ வெளியிட்டுள்ள காணொலியில் “காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள எங்கள் பாலஸ்தீனிய சகோதரர் களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் குற்றங்கள் நிறுத்தப்படும் வரை இஸ்ரேலுக்கு எதிரான எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நாங்கள் தொடர்வோம்,” என்று தெரிவித்துள்ளார். கப்பலை ஹவுதி அமைப்பினர் கைப்பற்றிய பிறகு இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் கப்பலின் உரிமை, அதனுடைய செயல்பாடு மற்றும் அதில் உள்ள சர்வதேச பணியாளர்கள் ஆகிய எதிலும் இஸ்ரேலுக்கு தொடர்பில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சர்வதேச கடல் பாது காப்புக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் “ஈரானிய பயங்கரவாத செயல்” என்று, ஈரான் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லாமல் இஸ்ரேல் குற்றம்சாட்டி யுள்ளது.
ஈரான் எச்சரிக்கை
“பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரி வித்து தாங்களாகவே முடிவெடுத்துக் கொண்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்புக் குழுக்களின் முதல் கட்டப் போரை நாம் பார்த்துக் கொண்டு உள்ளோம். இஸ்ரேலின் போர்க் குற்றங்களைத் தடுப்பதற்கான சாத்தியமான முடிவு கள் வரவில்லை என்றால், மத்திய கிழக்கில் ஒரு புதிய சூழ்நிலையைப் பார்ப்போம்” என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், போர்ச் சூழல் தீவிரமாவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.