tamilnadu

img

தோழர் ஏ.கே.கோபாலனுக்கு தேசத்தின் மரியாதை

காசர்கோடு, ஜுலை 25- நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக, மக்க ளவையின் முதல் எதிர்க்கட்சித் தலை வர் ஏ.கே.ஜி. என்றழைக்கப்பட்ட ஏ.கே.கோபாலன் அவர்களுக்கு தேசத்தின் மரியாதை செலுத்தப் பட்டது. ஏ.கே.கோபாலனின் மகள் லைலா, மருமகன் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பி.கருணா கரன் மற்றும் பேரக்குழந்தைகள் சிறப்பிக்கப்பட்டனர். கண்ணூர் ஆட்சியர் எஸ்.சந்திர சேகர் நீலேஸ்வரம் பள்ளிக்கரையில் உள்ள பி.கருணாகரனின் ‘அமராவதி’ இல்லத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். காசர்கோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, நாட்டின் 75 சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறப்பிக்கப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த கேப்டன்  லட்சுமி, கே.கேளப்பன் ஆகியோரின் குடும்பத்தினரும் சிறப்பிக்கப்பட உள்ளனர்.