கண்ணூர், மார்ச் 30- சிபிஎம் 23ஆவது அகில இந்திய மாநாட்டு கொடி தினத்தின் ஒரு பகுதி யாக கையூர் தியாகி தினமான செவ்வா யன்று காலை கட்சி அலுவலகங்கள், கிளைகள் மற்றும் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் கொடி ஏற்றப்பட்டது. கண்ணூரில் உள்ள கட்சி அகில இந்திய மாநாட்டு அமைப்புக் குழு அலுவலகம், கண்ணூர் மாவட்டக் குழு அலுவலகமான அழிக்கோடன் மந்திர், 18 பகுதிக் குழு அலுவலகங்கள், 243 உள்ளூர் கமிட்டி அலுவலகங்கள், 4,247 கிளைகள், 61,688 கட்சி உறுப்பி னர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு களில் கொடி ஏற்றப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினரு மான கொடியேரி பாலகிருஷ்ணன் கொடியேரியில் உள்ள மூளி கிளை யிலும், மத்தியக் குழு உறுப்பினர் இ.பி. ஜெயராஜன் அமைப்புக் குழு அலு வலகத்திலும் கொடியேற்றினர். மத்தி யக் குழு உறுப்பினர்களான பி.கே. ஸ்ரீமதி வீடுகளிலும், கே.கே.ஷைலஜா பழஸி ஏ கிளையிலும், கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.வி.ஜெயராஜன் மாவட் டக்குழு அலுவலகத்திலும் கொடி யேற்றினர்.