tamilnadu

img

சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தொடங்கியது பாஜ ஹோலி கிங்டம் மேல்நிலைப் பள்ளி, தேவாலயம் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தொடங்கியது பாஜ ஹோலி கிங்டம் மேல்நிலைப் பள்ளி, தேவாலயம் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

பள்ளி ஊழியர்கள், பெண்கள், சிறுமிகள் காயம்

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் கவர்தா வில் (கபீர்தாம் மாவட் டம்) உள்ளது ஹோலி கிங்டம் ஆங்கில மேல்நிலைப் பள்ளி. இது மாநிலத்தின் பிரபல பள்ளியாகும். இந்த பள்ளியை பாதிரியார் ஜோஸ் தாமஸ் என்பவர் நிர்வகித்து வரு கிறார். அதாவது ஜோஸ் தாமஸ் குடும்பத்தின் முழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 18ஆம் தேதி அன்று காலை 11 மணி அளவில் தீவிர இந்துத்துவா அமைப்பு களான பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) குண்டர் கள் காவி கொடிகளுடன் மத மாற்றம் நிகழ்வதாகக் கூறி, ஹோலி கிங்டம் மேல்நிலைப் பள்ளி மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள தேவால யம் மீது தாக்குதல் நடத்தியுள்ள னர். இந்த தாக்குதலில் தேவால யம் மற்றும் பள்ளி ஊழியர்கள், பெண்கள், சிறுமி என பலர் காயமடைந்துள்ளனர். மைனர் சிறுமிகளிடம்  மிரட்டல்  இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பள்ளி ஊழியர் ஒருவர்  கூறுகையில்,”மே 18 அன்று, காலை 11 மணியளவில் சுமார் 80 முதல் 100 பேர் கொண்ட பஜ்ரங் தளம் - விஎச்பி குண்டர்கள் பள்ளி வளா கத்திற்குள் நுழைந்தனர். ஞாயிறு வழிபாடு நடைபெற்றுக் கொண்டி ருந்த தேவாலயத்துக்குள் நுழைந்து “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூச்சலிட்ட இந்துத்துவா குண்டர் கள், தேவாலய பிரார்த்தனை அறை களுக்குள் நுழைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கொடூர மாக தாக்குதல் நடத்தினர். குறிப்பாக கழிப்பறைகளில் மறைந் திருந்த மைனர் சிறுமிகளிடம் உங் களை ஏதாவது செய்துவிடுவோம் என்று மிரட்டியது” என அவர் கூறினார். பாஜக அரசின்  காவல்துறை அடாவடி தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த உடன் தேவாலய ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரி வித்தனர். காவல்துறையினர் உட னடியாக வந்தாலும், இந்துத்துவா குண்டர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வன்முறையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த் துள்ளனர். மேலும் கட்டாய மத மாற்றக் குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில் தேவாலய உறுப்பினர் களை வாக்குமூலம் அளிக்கும் படி காவல்துறை மிரட்டியதாகவும், தாக்குதலின் சிசிடிவி காட்சிகளை  காவல்துறை பறிமுதல் செய்ததாக வும் பள்ளி மற்றும் தேவாலய ஊழி யர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளியின்  உரிமையாளர் கைது சிசிடிவி வீடியோக்கள், நேரில் கண்ட சாட்சியங்கள் மற்றும் பள்ளி நிறுவனரும், பாதிரியாருமான ஜோஸ் தாமஸின் மகன் ஜோசு வா தாமஸ் அளித்த எழுத்துப்பூர்வ  புகார் உள்ளிட்ட ஏராளமான ஆதா ரங்கள் இருந்த போதிலும், தாக்கு தல் நடத்திய இந்துத்துவா குண்டர் கள் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு கூட  செய்யவில்லை. ஆனால் இந்துத்துவா குண்டர்கள் அளித்த புகாரின் பேரில் ஜோஸ் தாமஸ் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரைப்  பதிவு செய்ய மறுப்பு ஹோலி கிங்டம் பள்ளியின் முதல்வரும், போதகருமான ஜோஸ் தாமஸ் அவர்களின் மகன் ஜோசுவா ஜோஸ் தாமஸ்  கூறுகை யில்,“எங்கள் குடும்பம் அனைத்து  சமூகங்களுக்கும் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ஹோலி கிங்டம் மேல் நிலைப் பள்ளியை நடத்தி வரு கிறது. ஆனால் இந்துத்துவா குண்டர்கள் என் அம்மாவையும், தம்பியையும் கொடூரமாகத் தாக்கி னார்கள். என் தந்தை கைது செய்யப் பட்டார். கடந்த ஒரு வாரமாக நாங் கள் தலைமறைவாக இருந்தோம்.  காவல்துறையிடம் புகார் அளித்தால், எங்கள் புகாரைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். தாக்குதல் சம்பவம் நடந்த பின் கபீர்தாம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நடந்தவற்றை கூறி னோம். தொடர்ந்து எனது தாயார் ஒரு திருமண விழாவில் சத்தீஸ் கர் உள்துறை அமைச்சர் விஜய்  சர்மாவிடம் நேரடியாகப் பேச முயன்றார். ஆனால் இதுதொ டர்பாக ஒரே வார்த்தையில் “பார்ப் போம்” என்று மட்டுமே கூறி  அமைச்சர் நழுவிவிட்டார். பிறகு தான் தெரிந்தது பாஜக மாவட்டத் தலைவர் ராஜேந்திர சந்திரவன்ஷி மற்றும் மாநில உள்துறை அமைச் சர் விஜய் சர்மா உள்ளிட்ட அரசி யல் தலைவர்கள் தாக்குதல் நடத்தியவர்களைக் காப்பாற்றினர் என்று.  மிரட்டிப் பணம்  பறிக்கும் முயற்சி வன்முறைக்கான உண்மை யான தூண்டுதல் மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியான மத ரீதி யிலான தாக்குதல் ஆகும். பாஜக மாவட்டத் தலைவர் ராஜேந்திர சந்திரவன்ஷி கடந்த 2 வருடங்க ளாக கட்டணம் செலுத்தாமல், முறையான விண்ணப்பம் எதுவும் இல்லாத போதிலும் குழந்தைக ளை பள்ளியில் சேர்க்கக் கோரி மிரட்டல் விடுத்தார். மேலும் பாஜக ஆதரவாளரின் குழந்தைக்கு பள்ளியை நிறைவு செய்யாமல் இடமாற்றச் சான்றிதழ் கேட்டு பள்ளிக்கு மிரட்டல் விடுத்தனர். எங்கள் பள்ளி நிர்வாகம் மறுத்ததால் அழுத்தம் மற்றும் மிரட்டல்  அதிகரித்தது. அதே போல மதமாற்றம் செய்வதாக கூறி ரூ.1 லட்சம் கேட்டு பாஜக தரப்பில் அடிக்கடி மிரட்டலும் வந்தது” எனக் கூறினார். தாமஸ் குடும்பம் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல பாஜக மூத்த தலைவர் ராமன் சிங் முதலமைச்சராக இருந்த போது 2010ஆம் ஆண்டில் போதகர் ஜோஸ் தாமஸ் பொய்யான குற்றச் சாட்டுகளின் கீழ் 10 நாட்கள் சிறை யில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதி மன்றங்களால் அவர் விடுவிக்கப் பட்டார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டில், 100 பேர் கொண்ட இந்துத்துவா கும்பல் பள்ளி குடி யிருப்புப் பகுதியின் சில பகுதிக ளை இடித்தது. அப்போது காங்கி ரஸ் ஆட்சியில் இருந்ததால் முதல மைச்சர் பூபேஷ் பாகேல் கடும் நட வடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனாலும் பாஜக மோடி அரசின் உதவியோடு வருமான வரித்துறையை ஏவியது. வங்கிக் கணக்குகளை முடக்கியது.

காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்கவில்லை

ஹோலி கிங்டம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்ட வர்கள் பலர் ஐஏஎஸ் அதிகாரி கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சிஏக்கள் (பட்டய கணக்காளர்கள்) என உயர்ந்துள்ளனர். இது 35 ஆண்டுகள் பழமையான பள்ளி. ஆனால் கவர்தாவை விட்டு வெளியேறவில்லை என்றால்,  எங்களைக் கொன்றுவிடுவோம் என இந்துத்துவா கும்பல் தொடர்ந்து மிரட்டுகிறது. நாங்கள் செல்வோம் என்று எதிர்பார்த்து நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் பள்ளிக்கு வெளியே தினமும் இந்துத்துவா கும்பல்கள் கூடுகின்றன. இதுவரை எந்த நண்பர்களும் எங்களுக்கு ஆதர வளிக்கவில்லை. காரணம் அவர்கள் அஞ்சு கிறார்கள்; உள்ளூர் மக்களும்  பயப்படுகிறார்கள். எங்களுடன் நின்றவர்கள் கூட தங்களைத் தூர விலக்கிக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரும் நிலைமை சீரடையும் வரை காத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக சம்பவத்தின் போது நாங்கள் அணுகிய காங்கிரஸ் தலைவர்கள் கூட உதவ மிகவும் பயப்படுகிறார்கள்” என ஜோசுவா தாமஸ் சோகத்துடன் கூறினார்.  சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் ஆளுங் கட்சியும், தற்போதைய எதிர்க்கட்சியுமான காங்கிரஸ் கட்சி ஹோலி கிங்டம் மேல்நிலைப் பள்ளி மீதான தாக்குதலுக்கு உதவாமல் மறுப்பு தெரி வித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

மாவட்டம்  முழுவதும் தேவாலயங்கள் மூடல்

இந்துத்துவா கும்பலின் அட்டூழியத்தால் மே 25ஆம் தேதி ஞாயிற் றுக்கிழமை கவர்தா முழுவ தும் பல தேவாலயங்கள் மூடப் பட்டிருந்தன. இந்துத்துவா கும்பலின் மிரட்டலுக்கு அஞ்சியே தேவாலயங்கள் மூடப்பட்டன என பாதிரியார்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.