புதுக்கோட்டை கட்டுமாவடியில் இந்து - முஸ்லிம் சமூக நல்லிணக்க விழா
அறந்தாங்கி, மே 27- புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தோடு இணைந்து நடத்தப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வைகாசி மாத திருவிழா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபி ஷேக நிகழ்ச்சியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதேபோல் சேக் இஸ்மா யில் வலியுல்லா தர்கா சிறப்பு பாத்தியா ஓதியும், அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், பாலாபிஷேகம் நடை பெற்றது. இதில் ஜமாத்தார்களும், ஏனாதி கிராமத்தார்களும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.