tamilnadu

img

கைம்பெண் நுழைவதால் கோவில் புனிதம் கெட்டுவிடுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஆக.5- கைம்பெண் நுழைந்தால்  கோவில் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கை இன்னும் நிலவுவது துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதி மன்றம் வேதனை தெரிவித் துள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பி யூர் தாலுகா கெட்டிசெவியூர் கிராமத்தில் உள்ள பெரிய  கருப்பராயன் கோயிலில் பூசாரியாக இருந்த பொங் கியப்பன் மனைவி தங்கமணி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதில் கணவனை இழந்த தன்னையும், தன் மகனை யும் அதே ஊரை சேர்ந்த அய்யாவு மற்றும் முரளி ஆகி யோர் கோயிலில் நுழைய விடாமல் விரட்டுவதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கைம்பெண் கோயி லுக்குள் நுழைந்தால் புனிதம்  கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கைகள் தமிழ்நாட்டில் இன்னும் இருப்பது துர திர்ஷ்டவசமானது என்றார். இந்த அர்த்தமற்ற நம்பிக் கைகளை பல சீர்திருத்த வாதிகள் தகர்க்க முயன்றா லும் கிராமப்புறங்களில் இன்னும் அந்த நம்பிக்கை கள் தொடர்வது வேதனை அளிக்கிறது என்று நீதிபதி  தெரிவித்தார். தங்கள் வசதிக் கேற்ப ஆண்கள் வகுத்த இந்த விதிகளால் கணவனை இழந்த பெண்கள் இழிவு படுத்தப்பட்ட தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தின் ஆட்சி நடை பெறும் நாகரிக சமுதாயத் தில் இவற்றையெல்லாம் அனுமதிக்க முடியாது என்ற நீதிபதி, கோயில்  வழிபாட்டில் கலந்து  கொள்வதை தடுக்க எவ ருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பளித் தார். மனுதாரரை கோவிலுக் குள் நுழைய விடாமல் யாரே னும் தடுக்க முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று காவல் துறைக்கு  நீதிபதி உத்தரவிட்டார்.