tamilnadu

img

பா.ரஞ்சித் பேச்சு குறித்த வழக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைப்பு

மதுரை:
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் சர்ச்சைக்குரிய  வகையில் பேசியது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர்  இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில்,இயக்குநர் பா. ரஞ்சித் முன் ஜாமீன் வழங்கக் கோரிஉயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு வினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,”ஜூன் 5-ஆம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாருக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடை பெற்றது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உரு வாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

நமது வரலாறு பேரரசன் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் எனக் குறிப்பிடுகிறது. ஆனால், பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது.பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். 
எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையே யும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை.  ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். 
இந்த வழக்கு திங்களன்று  நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் தலை மைக் குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கு விசாரணையை  செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மற்றொரு மனு
இதற்கிடையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போ ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக பா.
ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளருக்கு சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக பா.ரஞ்சித் தரப்பு வழக்கறி ஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி பாரதிதாசன், பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்
பில்லையா? என அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

;