tamilnadu

அரசுப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு

சென்னை,மார்ச் 1-  அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண் காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் லாபநோக்க முடன் தனியாக மாலையில் டியூசன் எடுப்ப தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்ட விரோதம். பணம் பெற்றுக் கொண்டு லாபநோக்கத்துடன் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு அரசு இலவச தொலை பேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும், டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி  ஆசிரியர்களை கண்காணித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி யிருந்தது. மேலும், இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க பிரத்யேக மாக இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் இதுகுறித்த வழக்கு மார்ச் 1 அன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. மேலும்,  தனியார் டியூஷன், பகுதி நேர வேலை, இதர வேறு  தொழில்கள்  உள்ளிட்டவைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.