tamilnadu

img

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கன மழை!

கோவை, நீலகிரி மாவட்டங்களில்  கொட்டித் தீர்க்கும் கன மழை!

20 இடங்களில் மண் சரிவு; 43 இடங்களில் மரங்கள் விழுந்தன

கோயம்புத்தூர், மே 26 – கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை சனிக்கிழமையன்று (மே 24) தொடங்கியது. இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டல மாக மாறி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட மேற்கே 40 கிலோ தொலைவில் மையம் கொண்டதன் காரணமாக, மகாராஷ்டிரா, கர்நாட கம் மற்றும் தமிழ்நாட்டிலும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 20  செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ கொடுத்தது. அதன்படி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட் களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  திங்களன்று காலை 7:00 மணி நிலவரப்படி அவலாஞ்சி 35 செ.மீ., அப்பர்பவானி 29 செ.மீ., எமரால்டு 18 செ.மீ., கூடலூர் 15 செ.மீ., பந்தலூர் 13 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

20 இடங்களில் மண் சரிவு

உதகை – மஞ்சூர் சாலை, எடக் காடு, பிக்கட்டி, தங்காடு ஓரநள்ளி மற்றும் உதகை சுற்றுவட்டார பகுதி களில், 20 இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.  இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாகவும், 4 வீடுகள் சேத மடைந்து உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வால் பாறையில் பல்வேறு பகுதிகளில் ராட்சத மரங்கள் சாலையில் விழுந்துள்ளன.

சிறுவன் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ட்ரீ பார்க் சுற்றுலா மையத் தில் மரம் விழுந்ததில் கேரளம் மாநிலத் தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார்.  பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. தமிழ்நாடு பேரி டர் மீட்புப் படையினர் மீட்புப் பணி களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, முக்கியச் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் அதன்  முழுக் கொள்ளளவான 100 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 16,000 கன அடி உபரி நீர், பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரைச் சாவடி தடுப்பணை நிரம்பி வழி வதுடன், பேரூர் படித்துறையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 26.60 அடியாகி உள்ளது.