சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் புதனன்று (மார்ச் 30) தொடங்கிவைத்தார். இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:- சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்து வமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒர் அம்சமாக, சுகாதார கொள்கை வகுப்பதில் பொதுமக்களின் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சுகா தாரப் பேரவை கூட்டங்கள் நடத்தப்படு கின்றன.
இப்பேரவையில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பி னர், சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர், அரசு சாரா அமைப்பு கள், பொது சமூக அமைப்புகள், பொதுமக்கள், தனியார் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு, பொது மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான தேவைகளை நேரடியாக மக்களிடமே கேட்டறிந்து, அக்கோரிக்கை களுக்கு தீர்வுகாணும் வகைகளில் சுகாதார அமைப்பை வலுப்படுத்து வதற்கான தீர்மானங்கள் நிறை வேற்றப்படுகிறது. மேலும், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் போன்றோ ருடைய தனிப்பட்ட தேவைகள் முன்னி லைப்படுத்தி தீர்வு காணப்படுகிறது. இம்முன்னோடி திட்டத்தில் இது நாள்வரை சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், தருமபுரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக் குடி, திருநெல்வேலி, திருவண்ணா மலை, தென்காசி, நீலகிரி, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட சுகாதார மக்கள் சபையின் தீர்மா னங்கள், மாநில சுகாதாரப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு, மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தகைய மக்கள் சபைக் கூட்டங்கள் மூலம், சுகாதார அமைப்பில் வெளி ப்படைத் தன்மையும், பொறுப்புணர்வும் மேம்படும், சுகாதாரம் மற்றும் மருத்து வம் தொடர்பான கொள்கை முடிவு எடுப்பதில் சமுதாயத்தின் ஈடுபாடும், பங்கேற்பும் அதிகரிக்கும்.
இப்பேரவையை தொடங்கி வைக்க தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வருகை புரிந்த போது, தமிழக முதல்வர், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செல வில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவி களின் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்ட மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.