தமிழ்நாட்டின் தொழிற்சங்க முன்னோடிகளில் முதன்மையானவர் சென்னைத் தொழிலாளர்களின் நலன்காக்கும் நம்பிக்கை நாயகர் சிங்காரவேலரின் நண்பர் கிறிஸ்தவ மத பிரச்சாரகராக இருந்த போதிலும் தொழிலாளர் உரிமையை காப்பதற்காக சமரசமற்ற போராட்டம் நடத்தியவர், அதனால் பல்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டவர். ஒருமுறை நீதிமன்றம் அவரது சொத்துக்களை ஜப்தி செய்யும்படி கூறியபோது, என்னிடம் இருப்பது உடுத்திய உடையும், பைபிளும் தான் என்று முழங்கியவர். இன்றைய நவதாராளமயச் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் பாட்டாளிகளை பாதுகாக்க அவரது துணிச்சலையும் தொண்டையும் நாமும் கைக்கொண்டு நடைபோடுவோம்.
இன்று சர்க்கரைச் செட்டியார் நினைவுநாள்