tamilnadu

img

ஆஷா தொழிலாளர்களை எஸ்மாவில் கைதுசெய்து ஹரியானா பாஜக அரசு அராஜகம்

புதுதில்லி, பிப். 23 - ஹரியானாவில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்திப் போராடும் ‘ஆஷா’ ஊழியர்கள் மீது மாநில பாஜக அரசு எஸ்மா உள்ளிட்ட கடுமை யான சட்டங்களை பயன்படுத்தி அடக்குமுறை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஹரியானா மாநில  ஆஷா ஊழி யர்கள் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.  குறிப்பாக மாநிலத்தில் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்து வதில் தங்கள் உயிரையும் பாது காப்பையும் பணயம் வைத்து முழு  மனதுடன் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பிப்.17-ஆம்  தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டனர். ஆனால், ஹரியானா அரசு வாக்குறுதியை நிறைவேற்று வதற்குப் பதிலாக பிப். 15-ஆம் தேதி மாலை எஸ்மா சட்டத்தைப் பிரயோ கித்தது. ஜனநாயக விரோத நடவடி க்கைகளுக்கு பெயர் பெற்ற ஹரி யானா பாஜக அரசு, 16- ஆம் தேதி மாலை முதல் பல மாவட்டங்களில் சிஐடியு மற்றும் ஆஷா ஊழியர் சங்கத் தலைவர்களை வீட்டுக் காவ லில் வைத்தது.

சிஐடியு மாநிலத் தலைவரும், ஆஷா ஊழியர் சங்கத்தலைவரு மான சுரேகா, ஆஷா தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சுனீதா, மாதர் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் சவிதா மற்றும் நிர்வாகி களை பிப். 17-ஆம் தேதி குருக்ஷேத்ரா வில் அம்பாலா செல்லும் வழி யில் காவல்துறை கைது செய்தது.  பிவானி உள்ளிட்ட பல மாவட்டங் களில் சிஐடியு, எஸ்கேஎஸ் மற்றும் ஆஷா தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆஷா பணியாளர்கள் துன் புறுத்தப்பட்டதோடு, கொடூர மான தாக்குதலுக்கும் உள்ளாகி யுள்ளனர். ஆனால், கைது, அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் போராட்டம் ஒவ்வொரு மாவட்டத்தி லும் தொடர்ந்து நடைபெற்றுவரு கிறது. 

சிஐடியு வலியுறுத்தல்

ஒன்றிய அரசின் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்; 2018-ஆம் ஆண்டு சட்டசபையில் முதல்வர் அறிவித்த ஊதிய உயர்வு  அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்;  தொழிற்சங்கங்களின் கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ்  ஆஷா பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்கள் கடந்தாண்டு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜக அரசு வாக்குறுதிகளை நிறை வேற்றாமல்  பொய்ப் பிரச்சாரம், ஆட்குறைப்பு, தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது என ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.  ஆனால், அடக்குமுறைக்கு மத்தி யிலும் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை துணிச்சலுடன் தொடர்கின்றனர்.

எஸ்மா சட்டத்தை திரும்பப்பெறு

ஹரியானா அரசு கடுமையான எஸ்மா சட்டத்தை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும்  தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஆஷா மற்றும் அங்கன்வாடி தொழிற்சங்கங்களு டன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஹரியானா அரசு அமல்படுத்த வேண்டுமென சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. (ஐஎன்என்)