மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்திய கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் அம்மாநில பாஜக முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கனல் கண்ணன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சூர்யா, விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் தங்கதுரை ஆகியோர் தலைமை வகித்தனர்.