tamilnadu

img

கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், மே 28- கைத்தறி நெசவு தொழி லாளர்களுக்கு தரம் இல்  லாத நூல்களை வழங்கி வேலை இழக்கச் செய்யும்  அதிகாரிகளை கண்டித்தும், தரமான நூல் வழங்கிட வலி யுறுத்தியும், சம்பளத் தொகையை வங்கிக் கணக்  கில் செலுத்தாமல் நேரடி யாக கையில் வழங்கிட கோரி யும், சட்டமன்றத்தில் அமைச்  சர் அறிவித்தபடி கூலி உய ர்வை உடனே அமல்படுத்த கோரியும், வேலையிழப்பு இல்லாமல் உற்பத்தியை தொடர்ந்து வழங்கிட வலி யுறுத்தியும் சிஐடியு கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்  பில் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கைத்தறி கூட்டுறவு சங்க  முன்னாள் தலைவர் எஸ்.மருது தலைமை வகித்தார். முன்னாள் இயக்குநர் ஏ. குருநாதன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத்  தலைவர் எம்.மகாலட்சுமி, கைத்தறி சங்க மாவட்டச்  செயலாளர் ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ஆர்.எம். மாரியப்பன், முன்னாள் இயக்குநர்கள், கைத்தறி நெசவு தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.