அரிசி உள்ளிட்ட அத்தியா வசிய உணவுதானியங் களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்திருக் கிறது பாஜக ஒன்றிய அரசு. வெறும் 5 விழுக்காடு வரி தானே விதித் திருக்கிறோம். இதனால் பெரிய பாதிப்பில்லை, எதிர்க்கட்சிகள் தான் இதை அரசியலாக்குகின்றன என போகிற போக்கில் சொல்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். எதிர்க்கட்சிகளின் மீது பழி போடுவதோடு நிறுத்திக் கொண் டாரே. அதுவரை பரவாயில்லை தான். ஏனெனில் ஓட்டலில் சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்ட போது, அது நியாயமா என மக்கள் கேட்ட தற்கு, “நீங்கள் ஏன் ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள் என கேட்டவர், வெங்காயவிலை அதிகரித்த போது “இதுக்குதான் நான் வெங்காயமே சாப்பிடுவதில்லை யாக்கும்” என தன்னிலை விளக்கம் அளித்தவர், “அரிசி விலை ஏறிடுச்சுன்னா ஏன் அரிசி சாப்பிட றீங்க, வேற எதாவது சாப்பிட லாமே”..? என கேட்காமல்விட்ட தற்கு முதலில் அவருக்கு ஒரு நன்றி சொல்லி விடலாம்.
ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளிப் போடுதல்
வெறும் 5 விழுக்காடு ஜிஎஸ்டி தானே என நிர்மலா சீதாராமன் சொல்வது போல இது உண்மை யிலேயே பாதிப்பில்லாத பிரச்ச னை தானா..? இந்தியாவில் அரிசி உற்பத்தியின் ஆண்டு சராசரி 120 மில்லியன் டன்களாகும். அதில் மக்கள் 100 மில்லியன் டன்களை பயன்படுத்துகிறார்கள். அதாவது ஒரு மில்லியன் எனில் பத்து லட்சம். ஒரு டன் எனில் ஆயிரம் கிலோ. 100 மில்லியன் டன் எனில் 100 x 10,00,000 x 1000 = 100,000,000.000 ஆகிறது. அதாவது பத்தாயிரம் கோடி கிலோவாகும். ஆக பத்தா யிரம் கோடி கிலோவிற்கும் வரியை போட்டுவிட்டு வெறும் 5 விழுக் காடு தானே என கேட்பது மக்களை முட்டாள்கள் என கருதுகிற ஆணவம் தானே.. ஏற்கனவே “பிராண்டட்” ஆக வகைப்படுத்தப்பட்ட மூடை களுக்கு மட்டுமே போடப்பட்டி ருந்த வரி தற்போது அனைத்து வகையான அரிசிக்கும் போடப் பட்டிருக்கிறது. எனவே ஜி.எஸ்.டி எனும் பெயரால் சாதாரண அரிசி யை வாங்கி பசியாறுகிற ஏழை களின் சோற்றிலும் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது பாஜக ஒன்றிய அரசு. இத்தகைய விலையேற்றத்தின் மூலம் 25 கிலோ மூடை ஒன்றின் விலை ரூ.100/- லிருந்து ரூ.150/- வரையிலும் அதி கரிக்கப் போகிறது.
பாயாசத்திற்குப் பதில் பாய்சனா?
அரிசிக்கு மட்டுமல்ல.. மாவு வகைகள், தயிர், தேன், வெல்லம் உள்ளிட்ட அனைத்து அத்தியா வசிய உணவுப் பொருட்களின் மீதும் வரியை உயர்த்தியிருக்கிறது மக்கள் விரோத ஒன்றிய அரசு. இவர்களது இத்தகைய நட வடிக்கைகளால் இனிமேல் வீடு களில் விஷேசங்களின் போது பாயாசத்திற்கு பதில் பாய்சனை (விஷம்) தான் குடிக்க வேண்டும் போல.. சாதாரண ஏழை எளிய மக்களின் உணர்வுகளையும், நிலைமைகளையும் புரிந்து கொள்ளாமல் இவர்கள் அடிக்கும் வெற்று ஜம்பத்திற்கு மட்டும் குறைச்சலில்லை. உலகப் பணக்காரர்கள் வரிசையில் நான்கா வது நபராக ஒரு இந்தியர் என பெருமிதத்தோடு பொங்குகிறார் மோடிஜீ.. அய்யா, கொஞ்சம் இந்த பக்கமாவும் பாருங்க. உலக பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்தில் இருக்கிறது. அரிசி தானே என அலட்சியமாகப் பேசுபவர்களுக்கு ஒன்றைச் சொல்வோம். அரிசிதான் பலமுறை அரசியலில் மாற்றங்களை உரு வாக்கியிருக்கிறது என்பதையும் மறந்து விடாதீர்கள் என எச்சரிக் கிறோம்.
- ஆர்.பத்ரி