tamilnadu

img

மாணவர்களைப் பழிவாங்காதே!

புதுச்சேரி, ஜன.6- புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான நடவடிக் கையை திரும்பப் பெறவில்லை என் றால் விவசாயிகள் போராட்டத்தை போல் தொடரும் என்று இந்திய மாண வர் சங்கத்தின் அகில இந்திய தலை வர் வி.பி.சானு எச்சரிக்கைவிடுத்தார். புதுச்சேரி மத்திய பல்கலைக் கழ கத்தின் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து போராடியதற்காக இரண்டு ஆண்டுகள் கழித்து பல்கலைக்கழக மாணவர் பேரவை நிர்வாகிகள் 11 பேர் மீது  நிர்வாகம் அபராத கட்டணம் விதித்ததோடு,5 ஆண்டுகள் படிப்பதற்குத் தடை விதித்துள்ளது.

இந்த மாணவர் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் சார்பில் பல  கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் அருகில் ஜனநாயக மாணவர் இயக்கங் களின் கூட்டியக்கம்  சார்பில் புதனன்று  (ஜன.5) நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, திமுக மாணவரணி அமைப்பா ளர் மணிமாறன் தலைமைதாங்கினார். போராட்டத்தை வாழ்த்தியும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நட வடிக்கையை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.சானு பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-  நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் ஒன்றிய பாஜக அரசு  கடந்த 7 ஆண்டுகளாக கல்விக் கட்ட ணங்களை பன்மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை எளிய  நடுத்தர மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணங்களை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேநிலைதான் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களி லும் தொடர்கிறது. எனவேதான் இந்திய மாணவர் சங்கம் மாண வர்களை திரட்டி அநியாய கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது.

புதுச்சேரியிலும் 225 விழுக்காடு கல்விக் கட்டணங்களை பல்கலைக் கழகம் உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி இந்திய மாணவர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் பேரவை நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து போராட்ட த்தை நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது 2 ஆண்டுகள் கழித்து பல்கலைக்கழக நிர்வா கம் தற்போது அரசியல் உள்நோக்க த்தோடு நடவடிக்கை எடுத்துள்ளது. போராடிய மாணவர்களை பல்கலைக் கழகத்தில் நுழைய தடை விதித்துள் ளது. தில்லியில் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத் தினார்கள். அத்தகைய போராட்ட த்தின் மூலம்  ஒன்றிய பாஜக அரசு பணிந்து உள்ளது. எனவே ஒன்றிய பாஜக அரசு மாணவர்களை பழிவாங் கும் இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். மாணவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வில்லை என்றால், நாடு முழுவதும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் மாணவர் களைத் திரட்டி போராட்டத்தை நடத்தும். இவ்வாறு அவர் பேசினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால்கென்னடி, காங்கிரஸ் கட்சியின் பிரதேச செயலாளர் சூசைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், பிரதேச செய லாளர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் சலீம்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தேவ.பொழிலன், சிபிஐ (எம்எல்) கட்சியின் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், மதிமுக நிர்வாகி கபிரியேல், இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் ஏ.டி. கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன், முன்னாள் பிரதேச செயலாளர் ஆனந்த், பிரதேச  நிர்வாகிகள் பிரவீன், ஜெயப்பிரகாஷ் மற்றும்  மாணவர் அமைப்புகளின் தலை வர்கள்  அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத் தில் பங்கேற்றனர்.