அமைச்சரவையின் உரையை திரித்துப் பேசினார்
சபையிலேயே பகிரங்கமாக கண்டனத் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்
சென்னை,ஜன.9- தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (ஜன.9)ஆளுநர் ஆர்.என். ரவி உரை யாற்றியபோது அமைச்சரவையின் உரை யை திரித்தும், தவிர்த்தும் பேசினார். குறிப்பாக, ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற வாக்கியம் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த நிலையில், அதனைப் பேசாமல் தவிர்த்தார். அதே போல் ஆளுநர் உரையில் பக்கம் 2 மற்றும் 3 ல் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் ‘இந்த அரசு’ என்று குறிப்பிட்டார். இதேபோல் 46 ஆம் பக்கத்தில் இருந்த ‘சட்டம் - ஒழுங்கை சிறப்பாக நிலை நாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்கா வாக திகழ்கிறது’ என்ற வார்த்தையையும் ஆளுநர் புறக்கணித்தார்.
மேலும், சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக் கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கை கள் இந்த அரசின் அடித்தளமாக அமைந் துள்ளன என்பதையும் 47 ஆவது பக்கத்திலுள்ள “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலை வர்களின் கொள்கைகளையும் கோட்பாடு களையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது” என்ற வாசகத்தை யும் புறக்கணித்தார். இதுமட்டுமின்றி, உரையின் இறுதி வாசகமான ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!’ என்பதை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார். இவை அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமைதி யாக, அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந் தனர்.
ஆளுநர் தனது ஆங்கில உரையை 10.50க்கு முடித்ததும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழில் வாசித்தார். அப்போது, ஆளுநர் தவிர்த்த தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து வார்த்தைகளை சுட்டிக் காட்டினார். மேலும், ஆளுநர் முழுமை யாக வாசிக்காமல் விட்டதையும் வாசித்தார். பேரவைத் தலைவர் முழுமை யாக வாசித்து முடித்ததும் முதலமைச்சர் பேசினார். ஆளுநருக்கு முதல்வர் கண்டனம் ஆளுநர் உரைக்கான வரைவு உரை, தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே அனுப் பப்பட்டு அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப் பட்டுள்ளன. இந்த அரசின் திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடு கள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும், நாங்கள் சட்ட மன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பு எங்களது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.
மிகவும் கண்ணியத்தோடு, அர சமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கை களுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநரால் இசைவளிக்கப் பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றாகும்.
தீர்மானம்
ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப் பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதி களுக்கு மாறாக ஆளுநர் இணைத்துப் படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றார். அதன்பிறகு, இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
வெளியேறிய ஆளுநர்
அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஆளுநர் ரவி, ஆளும் கட்சி உறுப்பினர்களும், தோழமை கட்சி உறுப்பினர்களும் முதலமைச்சரின் பேச்சை வரவேற்று மேசையை தட்டிய வுடன் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே வேக வேகமாக பேரவை யில் இருந்து வெளியேறினார். பாஜக எம்எல்ஏக்களும் வெளியேறினர்.
ஆளுநர் உரையாற்றி அமர்ந்தவுடன், அவரது செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எழுந்து கண்டனத் தீர்மானத்தை வாசித்த காட்சி.
தமிழ்நாட்டிலிருந்து வெளியேறுக!
ஜன.20 ஆளுநர் மாளிகையை சிபிஎம் முற்றுகை
சென்னை, ஜன.9- சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டப்பேர வையை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட, ஆர்எஸ்எஸ்சின் தொண்டராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனவரி 20 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கைக் குறிப்பே தவிர ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அரசின் தலைவர் என்கிற பொறுப்பின் காரண மாக ஆளுநருக்கு அந்த மரியாதை வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, தமிழ்நாடு ஆளுநர் அமைச்சர வை தயாரித்து, ஒப்புதல் அளித்த அறிக்கையில் தானடித்த மூப்பாக சிலவற்றை தவிர்த்தும், திரித்தும் வாசித்திருப்பது அரசமைப்புச் சட்டப்படி யும், தார்மீக நெறியின் படியும் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கையாகும். பெரியார், அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் கலைஞர் உள்ளிட்ட தலைவர் களின் பெயரையும், சுயமரியாதை, பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்ணுரிமை போன்ற தமிழ்நாடு அரசின் கொள்கை கள் குறித்த வாசகங்களையும் வாசிக்காமல் தவிர்த்திருக்கிறார். தமிழ்நாடு மாநிலம், தமிழ்நாடு அரசு ஆகிய அரசமைப்புச் சட்டத்தின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட பெயர்களை யும் உச்சரிக்க மறுத்திருக்கிறார். இவை யனைத்தின் மூலம் ஆளுநர் தனது கடமையிலிருந்தும், அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலிலிருந்தும் மீறியிருக் கிறார். இதன் மூலம் ஆளுநராக தொடர்வதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்திருக்கிறார்.
ஓர் அமைச்சரவை தயாரித்த அறிக்கையை மறைத்தும், திரித்தும் அவர் வாசித்துக் கொண்டிருந்த போது முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் களும், ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியின் உறுப்பினர்களும் அமைதி யாக கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், முதலமைச்சர் பேசிக் கொண்டி ருந்த போது, அவை நாகரீகமின்றி சட்டப்பேரவையையும், அதன் மூலம் தமிழக மக்களையும் அவமதிக்கும் வகையில் அவை மரபை மீறி ஆளுநர் வெளியேறிச் சென்றது அவரது சகிப்பின்மையையும், நாகரீக மற்ற தன்மையையும் வெளிப்படுத்தி யிருக்கிறது. இதேபோன்று தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார். இதுகாறும் அவைக்கு வெளியே வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக பாரம்பரியத்தையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருந்த ஆளுநர் சட்டப்பேரவைக்குள்ளேயே அவற்றை அரங்கேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதேசமயம், தமிழகத்தின் மாண்பையும், சட்ட மன்றத்தின் மாண்பையும் நிலை நிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழுஉரையும் அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என்றும், ஆளுநர் திரித்துக் கூறியவை நீக்கப்படும் என்றும் உடனடியாக முதல மைச்சர் நடவடிக்கை மேற்கொண்டது ஆளுநருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாகவும், பாராட்டுக்குரியதாகவும் அமைந்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப் பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளு நர், ஆர்எஸ்எஸ்சின் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடந்து கொண்டுள் ளார். தமிழ்நாட்டு மக்களை அவ மானப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதே தனது கொள்கையாக வும் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை வன்மையாக கண்டிப்பதோடு, அவர் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டு மெனவும் வலியுறுத்தி ஜனவரி 20 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என கட்சியின் மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.