tamilnadu

img

ரஷ்யா விண்வெளி மையத்திற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் பயணம்!

சென்னை, செப். 30- ரஷ்ய விண்வெளி ஆய்வு  மையத்தை பார்வையிடு வதற்காக தேர்வு செய்யப் பட்ட தமிழ்நாடு அரசு பள்ளி  மாணவர்கள் 50 பேர் சென்னை விமான நிலை யத்தில் இருந்து மாஸ்கோ புறப்பட்டுச் சென்றனர். கொரோனா காலத்தில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் கற்றல்  நடவடிக்கைகளை மேம் படுத்தவும், அவர்களது திறமையை வெளிப்படுத் தும் பல்வேறு நிகழ்ச்சி களை அரசு கல்வி நிறு வனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து செய்தன. அந்த வகையில் ராக்கெட் சயின்ஸ் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் தனியார் நிறு வனம் சார்பில் கடந்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல்  நடைபெற்றது. பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலை மையில் நடைபெற்ற இந்த  பயிற்சி வகுப்பில் தமிழ் நாட்டில் 56 அரசு பள்ளி களை சேர்ந்த 500 மாண வர்கள் பங்கேற்றனர்.  வினாடி-வினா மற்றும் அறிவியல் படைப்புகள் அடிப்படையில், ரஷ்ய  விண்வெளி ஆய்வு  மையத்தை பார்வையிடு  வதற்கு 75 பள்ளி மாணவர்கள் தேர்வாகினர். முதற்கட்டமாக 50 மாண வர்கள் ரஷ்யா புறப்பட்ட னர்.  பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். ரஷ்ய பயணம் தங்கள் விண் வெளி கனவுகளுக்கு நீர்வார்த்துள்ளதாக மாண வர்கள் மகிழ்ச்சி தெரிவித்த னர். அரசுப் பள்ளி மாண வர்களுக்கு கிடைத்துள்ள இந்த அறிய வாய்ப்பிற்கு மாணவர்களின் பெற் றோரும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும்  விஞ்ஞானி சிவதாணு பிள்ளை ஆகியோருக்கும் அவர்கள் நன்றி கூறினர்.  ரஷ்யா சென்றுள்ள தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ராக்கெட் ஏவுதளங்களை பார்வையிட உள்ளனர். மாணவர்களுடன் 10 அறிவியல் ஆசிரியர்கள் 10 ஒருங்கிணைப்பாளர்கள் சென்றுள்ளனர்.