கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு, கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடம் வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட சரபங்கா குடிநீர் திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவர்கள் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திரண்டு, தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.