சென்னை,பிப்.23- அரசு ஊழியர் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து வெளி யிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் குறைபாடுகளை களைய வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, பொதுச்செய லாளர் ஆ.செல்வம் ஆகியோர் முதல் வருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தமிழக அரசின் உயர்ந்த நோக்கத்தை சீர்குலைக்கும் விதமாக தனியார் மருத்துவமனைகள் அரசா ணையை முழுமையாக ஏற்று அமல் படுத்தப்படுவதில்லை. உதாரணமாக பணமில்லா சிகிச்சை என்பதை உத்தர வாதப்படுத்தப்படவேண்டும். பணம் கட்டினால் மட்டுமே சிகிச்சை என்பது பரவலாக தனியார் மருத்துவமனைகள் கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறது. ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்ற வாறு பேக்கேஜ் எனும் வார்த்தையைப் பயன்படுத்தி பணத்தை கைப்பற்றவே தனியார் மருத்துவமனைகள் முயல் கின்றன. தமிழகம் முழுவதும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஊழியர்களுக்காக மருத்துவமனை களில் தலையிட்டு வருகிறது.
இது ஒருபுறம் என்றால் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், இத்திட்டத்தை உள் ஒப்பந்தத்தின்படி தனியார் நிறுவனமான “MD India” மற்றும் “MEDI ASST” என்ற நிறு வனங்கள் இணைந்து தமிழகத்தை இரண்டாகப் பிரித்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து முதற்கட்ட ஒப்புதல் பெறுவதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டி யுள்ளது. அரசு ஊழியர்கள் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சை பார்த்த தனியார் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்கான தொகை தமிழக அரசு விடுவிக்கப்படவில்லை. இதனால் தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க மறுத்து வருகின்றன. தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு ,அரசு ஆணை யின்படி பணமில்லா சிகிச்சையை உத்தர வாதப்படுத்திடவும், சிகிச்சைக்கான பேக்கேஜ் முறை ரத்து செய்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முழுத் தொகையும் பெறுவதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர். இந்த கடிதத்தின் நகல், நிதி, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், மருத்துவம்-மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர், நிதித்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், கருவூலம் - கணக்குத்துறை ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.