tamilnadu

img

அரசு ஊழியர் சங்க தலைவர் இரா.சீனிவாசன் காலமானார்

விதிகளை மீறி பணியிட மாற்றம்:அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 11 - கரூரில் விதிமுறைகளை மீறி பணியிட மாற்றம் செய்த அதிகாரிகளை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் க.சம்பத்குமார். இவர் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவராக இருந்து வருகிறார். வேறு ஒருவருக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கரூர் மாவட்ட தோட்டக் கலைத்துறை நிர்வாகம் சம்பத்குமாரை, அரசு விதிமுறைகளை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்தினரும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அரசு விதிமுறைகளை மீறி சம்பத்குமாரை பணியிட மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.சம்பத்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரா.முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆ.சங்கர், மாநில இணைச் செயலாளர் இரா.கண்ணன், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் சங்க மாவட்டத் தலைவர் மா.சந்தனதுரை, தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் க.தங்கராஜ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.