tamilnadu

img

பாரம்பரிய உடையணிந்து தமிழ்த்தாய் வாழ்த்து

நாகர்கோவில், ஜுலை 5- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் தலை மையில் பணியாளர்கள் கதர் அல்லது கைத்தறியால் ஆன தமிழகத்தின் பாரம்பரிய உடைகளான வேட்டி,  சட்டை மற்றும் சேலை அணிந்து,   தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தினை செவ்வாயன்று (ஜுலை 5)  ஒருசேர பாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் பேசுகையில், தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி 75ஆவது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை யொட்டி  கன்னியாகுமரி மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் கடந்த 01.07.2022 முதல் 15.07.2022 வரை வெவ்வேறுதுறை களின் வாயிலாக பல்வேறு தலைப்பு களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொது மக்கள், இன்றைய இளம் தலைமுறை யினர் மற்றும் குழந்தைகளிடையே  விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும், நமது நாடு விடு தலை பெறுவதற்கு பல்வேறு தலை வர்கள், நமது முன்னோர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் இரத்தம் சிந்தி போராடி உயிர்நீத்தார்கள்.  அவர்களை நாம் நினைவு கூரும் வகையில் மாவட்டத் திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிர்வாகத்தின் சார்பில்  இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது

75ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்வு எதற்காக அரசு  நடத்துகிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். சுதந்திர போராட்டத் தில் எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கினோம், சுதந்திரத்திற்கு பின் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந் திருக்கிறோம். தற்போது சமூகத்தில் என்னென்ன பிரச்சனைகள் இருக் கிறது அதனை எப்படி கையாள்வது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டு மென ஆட்சியர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்டத் திற்குட்பட்ட வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத் துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக  வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், ஊரா ட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு  அலுவலர்கள், பணியாளர்கள் ஒன்று சேர்ந்து தேசப்பக்தியினையும், தமிழ் உணர்வினையும் வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தினை உணர்வு டன் பாடியதோடு, அதன் பொருள் விளக்கி கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  தே.திருப்பதி, மாவட்ட செய்தி மக்கள்  தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.ஆர்.வாணி, துணை இயக்குநர் தோட்டக் கலைத்துறை ஷீலா ஜாண், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன், மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலர் ஹரிதாஸ், மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர் சரோஜினி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.