சென்னை, செப்.25- உறுப்பு தானம் செய்வோ ருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் மேற்கொள் ளப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள் ளதை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் மரு. எஸ்.பெருமாள் பிள்ளை விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- தன் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போர் தியாகத் தைப் போற்றும் வகையில், இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோர் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். முதல்வரின் வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இது மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி யாக இருப்பது மட்டுமன்றி, தற்போது உறுப்பு தானம் என்பது நாடு முழுவதும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. நாட்டிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 4 வது முறையாக முதலிடத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதுவும் நம் நாட்டில் தமிழ்நாடு தான் அரசு மருத்துவமனைகளில், அதிக எண்ணிக்கையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இருப்பினும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டில் குறைவான ஊதியம் தரப்படுவது தான் வருத்தமளிக்கிறது. அது வும் உரிய ஊதியம் தரப்பட அரசாணை 354 இருந்தும் அமல் படுத்தப்படாமல் இருப்பது தான் வேதனையாக உள்ளது. அதுவும் முன்னாள் முதல்வர் கலைஞரால் 2008 ஆம் ஆண்டு மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப் பட்டது. 2015 ஆம் ஆண்டு தமிழ் நாடு உறுப்பு மாற்று ஆணையம் உருவாக்கப்பட்டது. தற்போது அனைவரும் வியக்கும் வண்ணம் மிகப்பெரிய அளவில் வலுப்படுத்தப்பட்டுள் ளது. குறிப்பாக தற்போது தமிழ்நாட்டில் 27 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உறுப்பு தானம் பெறுவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞரின் திட்டங் கள், எண்ணங்களை செயல்படுத் தும் அரசு, அவற்றை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அந்த வகையில் அரசு மருத்துவர்க ளுக்கு கலைஞர் கொடுத்த அரசாணை 354 ன் படி 12 ஆண்டு களில் ஊதியப்பட்டை நான்கு கிடைத்திட உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டுகிறோம். எனவே உறுப்பு தானம் செய் பவர்களுக்கு அரசு மரியாதை யும், அங்கீகாரம் அளித்து மாபெரும் அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு தொடர் சாதனை படைத்திட, தங்கள் பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர் களை அங்கீகரிக்கும் வகையில், அரசு மருத்துவர்களுக்கு நாட்டி லேயே சிறந்த ஊதியம் வழங்க வேண்டுகிறோம். இதன் மூலம் அரசு மருத்து வர்கள் இன்னும் உற்சாகமாக பணியாற்றிட வழிவகுப்பதோடு, அரசு மருத்துவர்கள் நீண்ட கால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.
கமல்ஹாசன்
பாராட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“ உடல் உறுப்பு தானம் வழங்குவோர் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பர வலாக்கும்” என்று கூறியுள்ளார்.