tamilnadu

img

நல்மேய்ப்பரை இனம் கண்டு கொள்வோம்!

எம்.எஸ்.இராஜகோபால்
(முகநூல் பதிவு)

அப்போது மதானி, சம்பானி ஆகிய இருவரும் ஜம்புத்திவீபம் எனப்படும் தேசத்தில் மேற்கு கரையோரம் சென்று கொண்டிருந்தார்கள்.  பசியும் தாகமும் அவர்களை வாட்டியது.   “ஆண்டவரே எங்களை இரட்சியும்! எங்களுக்கு அளவு  கடந்த பசியும் தாகமுமாயிருக்கிறது.. இந்த ஜம்புத்வீபத்தில் உள்ள அனைத்து எண்ணெயை குடித்தாலும் எங்கள் தாகம் தீராது போலிருக்கிறது... இந்த தேசத்தின் அனைத்து சொத்து களை ஸ்வீகரித்துக் கொண்டாலும் எங்கள் பசி தீராது போலிருக்கிறது” என்றனர். அப்போது அவர்களின் ஆண்டவராகிய டீமோ கோடி சூரிய பிரகாசமாய் அவர்கள் முன் தோன்றினார். “விசுவாச மானவர்களே! நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்! இதோ உங்கள்  பசியும் தாகமும் தீருவதாகுக... இனி நீங்களே என்னுடைய பெயரில் இந்த மண்ணை ஆள்வீர்கள் என வாக்குதத்தம் செய்து கொடுக்கிறேன்” என்றார்.  பின்னும் தன்னுடைய கையிலிருந்த கோலை எடுத்து மதானியை நோக்கி இந்த தேசத்தில் உள்ள துறைமுகங்கள் உனக்கு என்றார்.  துறைமுகங்கள் அவர் வசமாயின!  இந்த விமான நிலையங்கள் உனக்கு என்றார்!  அவையும் அவர் வசமாயின. இந்த இரயில் நிலையங்களும் இரயில்களும் உனக்கு என்றார்.  அப்படியே ஆயின. இந்த நிலக்கரி சுரங்கங்கள் உனக்கு என்றார். இது போத வில்லை என்றால் பரதேச சுரங்கங்களையும் உன்னுடைய தாய் ஆக்கித் தருவேன் என்றார்.  இந்த தேசத்தின் கப்பல்களை உனக்குத் தருகிறேன்.. அவை உனக்கான நிலக்கரிகளை சுமந்து வருமென்றார்.. இந்த சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் உனக்கு அருளப்படும் என்றார். உடனே அருளப்பட்டது.  இந்த மின் விநியோக நிலையங்கள் உனக்கானவை என்றார். அப்படியே ஆயின.  இயற்கை எரிவாயுவை உனக்களிப்பேன் என்றார்.  அவருக்கு அளிக்கப்பட்டது.  இன்னும் உனக்கு 5ஜி சேவையும் கால்பங்கு விலையில் அருளப்படும் என்றார்.  

இந்த தீபகற்பத்தில் உள்ள தொலைக்காட்சி நிலையத்தையும் நீ வாங்கிக் கொள்ளலாம் என்றார்.  அப்போது மதானியானவர் மிகவும் மெய்சிலிர்த்து “ஐயனே! தங்கள் கருணையே கருணை! இவ்வளவும் வாங்க தாங்கள் வழி சொல்லி அருள வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூற தேவனும் அகமகிழ்ந்தார்  “இந்த வங்கிகளை ஒருங்கிணைத்து மூன்று வங்கி களாக்கி அவற்றில் ஒன்றை உனக்களிப்பேன்” என்றார்.   அப்போது சங்கிகள் பூமாரி பொழிந்து கேவலமாக ஊளையிட்டனர்.  இப்போது சம்பானியின் பக்கம் திரும்பிய ஆண்டவ ராகிய டீமோ  “இந்த பூலோகத்தில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை விடவும் மிகப்பெரிய ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாய் உன்னுடையதை மாற்றுவேன் என்றார்.  இன்னும் தொலைத்தொடர்பு சேவையும் உனக்கு அருளப்படும் என்றார்.  மேலும் ஆண்டவராகிய டீமோ கூறலானார்.  இப்போது நடக்கின்ற யுத்தத்தினால் உருசிய தேசத்திலி ருந்து கச்சா எண்ணெயை என்னுடைய பெலத்தினால் கால்பாகம் விலை குறைத்து உனக்கு வாங்கித் தருவேன். நீ அதை சுத்திகரித்து சந்தை விலைக்கு ஏற்றுமதி பண்ணிக் கொள்ளலாம்.  மேலும் பிரபஞ்சத்தில் சூரிய சந்திரர் உள்ளவரை அதற்கு வரி எதுவும் கிடையாது என்பதை உனக்கு வாக்குத்தத்தம் செய்து கொடுக்கிறேன்” என்றார் உடனே அகமகிழ்ந்த தென்திசை சங்கிகள் தங்கள் தலைவர் அக்காமலை தலைமையில் குலவை பாடி ஆகா இவரல்லவோ நம் இரட்சகர் என்று கேவலமாக ஊளை யிட்டனர்.  ஆகவே பிரியமானவர்களே! மேய்ப்பரை இனம் கண்டு கொள்ளுங்கள்! அவரே நல்மேய்ப்பர்..   அப்கோர்ஸ்... அவுங்க ரெண்டு பேருக்கும்!

;