சமீபத்தில் நிறைவுபெற்ற ஐநா சூழல் பேரவை (U N EA) 5.2 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த சர்வதேச உடன்படிக் கைக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ல ஒருமனதாக தீர்மானித்துள்ளனர். இது 2015 பாரிஸ் உடன்படிக்கைக்குப் பிறகு பன்னாட்டு அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய காலநிலை தொடர்பான ஒப்பந்தம் என்று கருதப்படுகிறது. 173 உலக நாடுகளில் இருந்து உலகத் தலை வர்கள், சூழல் அமைச்சர்கள் மற்றும் பிற பிரதி நிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் சட்ட ரீதியில் பிளாஸ்டிக்குகளைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கையை உருவாக்க முடிவு செய்யப் பட்டது. வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் உரு வாக்கப்படும் இந்த உடன் படிக்கை பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி முதல் கழிவுநீக்கம் வரை அதன் முழு வாழ்க்கைச் சுழற்சியை உள்ளடக்கியதாக இருக்கும்.
வரலாற்று முக்கியத்துவம் உள்ள உடன்படிக்கை
இது வரலாற்று முக்கியத்து வம் உடைய ஒரு உடன்படிக்கை என்று ஐநா சூழல் திட்டத்தின் (UNEP) இயக்குநர் கூறியுள்ளார். 1950-2017 ஆண்டுகளுக்கு இடை யில் உற்பத்தி செய்யப்பட்ட 9.2 பில்லியன் டன் பிளாஸ்டிக்கு களில் 7 பில்லியன் டன் இன்று கழிவாக மாறியுள்ளது. இதில் 75 சதவீதம் குப்பைத்தொட்டிகளுக்குச் செல்கின்றன அல்லது நில நீர்ப்பரப்பை சீரழிக்கின்றன. இன்று உலகில் காணப்படும்புவி சார் அரசி யல் சூழ்நிலையில் ஐநா சூழல் பேரவை இதன் மூலம் உலக நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பேரவையின் தலைவர் மற்றும் நார்வே நாட்டின் சூழல், காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் எஸ்டென் பார்த் எய்டு. (Esten Barth Eide) கூறுகிறார்.
கொள்ளைநோயாக மாறும் பிளாஸ்டிக்குகள்
பிளாஸ்டிக் மாசு கொள்ளைநோய் போல மாறிவிட்டது. இம்மாநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை மூலம் இந்நோய்க்கு ஒரு தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது. இத்தீர் மானம் பிளாஸ்டிக்குகளைத் தோற்கடிக்க வழிவகுக்கும் என்று ஐநா சூழல் பேரவையின் இயக்குநர் இன்ஜர் ஆண்டெர்சென் (Inger Andersen) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு களுக்கு எதிரான இந்த உடன்படிக்கை புவிக் கோளின் அதற்கெதிரானப் போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று ஆண்டர் சென் கூறுகிறார். என்றாலும் இது குறித்த இறுதி முடிவு இன்னும் இரண்டு ஆண்டுகளில் உரு வாகவேண்டும் என்பதால் அதுவரை செயல் படாமல் சும்மா இருக்கக்கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார். இதனுடன் சேர்ந்து ஐநா சூழல் பேரவை ஒத்தகருத்துள்ள அரசுகள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் இணைந்து ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி முதல் கழிவாகும்வரை உள்ள வணிகச்சங்கிலியில் மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனியார் நிதி முதலீட்டை அதிகரித்து பிளாஸ்டிக்குகளின் வட்டப்பொரு ளாதாரத்தில் உள்ள தடைகளை அகற்றி கூடுதல் ஆய்வுப்பணிகளுக்கு உதவ ஐநா முன்வந் துள்ளது. மாநாட்டு மையத்தில் பெஞ்சமின் வான் வாங் (Benjamin Von Wong) என்ற சூழல் விழிப்புணர்வு கலைஞர் நகரின் பெரா (Bera) குடிசைப்பகுதியில் இருந்து சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 10 மீ உயர கலைவடிவத்தை உருவாக்கினார். “பிளாஸ்டிக் குகளைப் பயன்படுத்தாதீர்கள்” (turnoff the plastic tap) என்று மக்களை வேண்டிடும் வாசகங்கள் இதில் இடம்பெற்றிருந்தன.
உடன்படிக்கையின் அம்சங்கள்
பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 2இல் கென்யா வின் தலைநகர் நைரோபியில் நிறைவடைந்த இம்மாநாட்டில் பேச்சுவார்த்தைகள் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றி மட்டுமே அமைந்திருக்க வில்லை. அவற்றின் உற்பத்தி, வடிவமைப்பு ஆகியவை குறித்த அம்சங்களும் உடன் படிக்கையில் இடம்பெறும். இதற்காக பன்னாட்டு கமிட்டி (multi national negocia ting committee) அமைக்கப்பட்டுள்ளது. இது பிளாஸ்டிக்குகளை கட்டுப்படுத்தும் சர்வதேச ஒப்பந்தத்திற்கான வரைவுத்திட்டம் மற்றும் நெறிமுறைகளை உருவாக்கும். இது இந்த ஆண்டே தொடங்கும். 2024இல் இது இறுதிவடிவம் பெறும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் பூமியை சீரழிக்கக் காரணமாக இருக்கும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டில் புதிய திருப்பம் ஏற்படும்.
சூழல் காக்கும் முன்னணிப் போராளிகள்
நைரோபி மாநாடு நிறைவேற்றிய தீர்மா னத்தில் பிளாஸ்டிக்குகளை தெருக்களில் பொறுக்கும் மனிதர்களுக்கும் முக்கிய இடம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு இதுவரை வேறெந்த சர்வதேச உடன் படிக்கையில் இடம்பெறாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இது உலகம் முழுவதும் இருக்கும் மில்லியன்கணக்கான சாமான்ய மக்களின் வாழ்க்கையில் திருப் பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. சூழலை சுத்தப்படுத்தும் அற்புதப்பணியில் ஈடுபடும் இவர்களை முன்னணி செயல்பாட்டா ளர்களாகக் கருதி அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் இந்த முடிவை பல சர்வதேச சூழல் தன்னார்வ அமைப்புகள் வரவேற் றுள்ளன.
முதல்முறை அங்கீகாரம்
வளர்ந்துவரும் நாடுகளில் வாழும் இலட் சக்கணக்கான குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் மறுசுழற்சி செய்ய சாலைகளில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகலைப் பொறுக்குபவர்களுக்கு ஒரு சர்வதேச சூழல் உடன்படிக் கையில் அங்கீகாரம் கொடுக் கப்படுவது இதுவே முதல் முறை. பன்னாட்டு கொள்கை வகுப்பவர்கலிடையில் நிகழ்ந்துவரும் நல்லதொரு மாற்றத்தை இது பிரதிபலிக்கி றது. இதுவரை பிளாஸ்டிக் என்றால் கடலில் அதிகரிக்கும் கழிவுகள் பற்றி மட்டுமே பேசப்பட்டது. நைரோபியில் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மானம் 2050இல் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கு களின் உற்பத்தி நிலையில் இருந்தே அவற்றைக் கட்டுப்படுத்த இந்த உடன்படிக்கை உதவும். இது உலக கார்பன் பட்ஜெட்டில் 10-13%.
நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் நாளைக்காக
மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் 2024ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் உடன் படிக்கையில் உறுதியான செயல்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். சூழலைத் தாறு மாறாக்கும் பிளாஸ்டிக் மாசை இல்லாமல் செய்ய நைரோபி தீர்மானம் வழிவகுத்துள்ளது என்று உலக வன நிதியத்தின் (WWF) இயக்குனர் மார்க்கோ லம்பர்ட்டீனி (Marco Lambertini) கூறுகிறார். இது ஒரு தொடக்கம் மட்டுமே. அடையவேண்டிய இலக்கு இன்னும் வெகுதொலைவில் உள்ளது. உருவாகும் இடத்தில் இருந்து கட்டுப் படுத்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நீரிலும், நிலத்திலும் கழிவாக மாறும் பிளாஸ்டிக்குகளை குறைக்க நம்மால் உருப்படியாக எதையும் செய்யமுடியாது என்றுசூழலிற்கான புலனாய்வு அமைப்பின் (Environmental Investigating Agency EIA) கடற்சூழல் காக்கும் பிரிவின் துணைத் தலைவர் கிறிஸ்டினாடிக்ஸன் (Christina Dixon) கூறுகிறார். சட்டதிட்டங்களுடன் கூடிய ஒரு சர்வதேச பிளாஸ்டிக் உடன்படிக்கையை நோக்கி உலகம் பயணிக்கத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக்குகளை எரியூட்டுவதற்கு எதிரான உலகளாவிய இயக்கங்களின் வலுவான அழுத்தமே இத்தகைய ஒரு உடன்படிக் கைக்கு உலக நாடுகளை இட்டுச்சென்றது என்று எரியூட்டுவதற்கு எதிரான மாற்று வழி களுக்கான சர்வதேச கூட்டமைப்பின் (Global Alliance for Inscenerater Alternatives GAIA) ஆப்பிரிக்க ஒருங்கிணைப்பாளர் நைவன் ரெட்டி (Niven Reddy) கூறுகிறார். பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது, புதைப்பது ஆகியவற்றால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் மற்றும் குப்பை பொறுக்கும் ஏழைகளுக்கு நைரோபி உடன்பாடு நல்லசெய்தியைக் கொண்டுவந்துள்ளது என்று டியர்பண்ட் (Tearfund) என்ற சூழல் அமைப்பின் மூத்த கோட்பாட்டாளர் ஜோவான் க்ரீன் (Joanne Green) கூறுகிறார்.
பிளாஸ்டிக் பொறுக்கும் மனிதர்களுக்கு இந்த உடன் படிக்கையில் அளிக்கப்பட்டுள்ள இடம், பல காலங்களாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை இப்போது பெற்றுத் தந்துள்ளது. ஆட்சியாளர்கள் இவர்களையும் பேச்சு வார்த்தைகளில் பங்கு பெற செய்யவேண்டும் என்று க்ரீன் கூறுகிறார். நிதி, தொழில்நுட்ப உதவிகளை வழங்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்லது. இதற்காக உலக நிதி ஒன்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஐநா சூழல் பேரவையின் 5.2 நைரோபி மாநாட்டில் 175 ஐநா உறுப்புநாடுகளில் இருந்து 3400 பிரதிநிதிகள் நேரடியாகவும், 1500பேர் நேரலை வழியாகவும் கலந்துகொண்டனர். இவர்களில் 79 அமைச்சர்கள், 17 உயர்நிலை அதிகாரிகள் அடங்குவர். அறுபதிற்கும் மேற் பட்ட நாடுகள் ஏற்கனவே பிளாஸ்டிக் பொட்டல மிடுதல், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக தடை மற்றும் வரிகளை விதித்துவருகின்றன. வளர்ந்த நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களின் நுகர்வு தனிநபர் ரீதியாக வளரும் நாடுகளைக் காட்டி லும் 2.5 மடங்கு அதிகம் என்று உலகளவில் சூழல் ஆய்வுகளை மேற்கொள்ளும் திங்க்டேங்க் (Planet Tracker Thinktank) அமைப்பு கூறுகிறது. உருவாக்கிய மனிதனே பிளாஸ்டிக் என்ற அரக்கனை அழிக்க வழிதெரியாமல் திண்டாடு கிறான். இன்று சூழலிற்கு வில்லனாக இருக்கும் இவை வருங்காலத்தில் சூழல் காக்கும் ஹீரோ வாக மாறட்டும். நைரோபியில் இருந்து வரும் பிளாஸ்டிக் பற்றிய இந்த சேதி நாளை மக்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தட்டும்.