tamilnadu

img

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு - எந்த உதவியும் செய்யவில்லை!

சிபிஎம் போராட்டம் வெற்றி மீண்டும் அதே வழித்தடத்தில்  அரசு நகரப் பேருந்து இயக்கம்

சென்னை, ஜன. 5 - தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு எந்த  உதவியும் செய்வதில்லை; 5.305 சதவிகித மாக இருந்த தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வை 4.079 சதவிகிதமாக குறைத்தது டன், செஸ், சர்சார்ஜ் எனப்படும் மாநிலங்களு டன் பகிர்ந்து கொள்ளப்படாத வரியை 10 சத விகிதத்தில் இருந்து 28.1 சதவிகிதமாக உயர்த்திக் கொண்டுள்ளது; தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரியில் 29 காசு களை மட்டுமே திருப்பித் தருகிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறி யுள்ளார்.

நிர்மலா சீதாராமன் காட்டிய கணக்கு

சென்னையில், வியாழனன்று நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த 2014-2023 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசு பெற்றுள்ளது. பெற்றதை விட அதிகமாகவே ரூ. 6.96 லட்சம் கோடி  பணத்தை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. இதுதவிர, ரூ. 50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவு சாலை திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மக்களுக்காக நிறைய திட்டங்களை கொண்டுவந்து இருக்கிறார். வீடு, சுகா தாரம், சாலை வசதிகள் என 17 திட்டங்கள் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டு இருக்கிறது” என்று அடுக்கியிருந்தார். மேலும், “2014 முதல் 2023 மார்ச் வரைக்கும் தமிழகத்திடம் பெற்ற வரி 6,23,713.3 கோடி வந்து இருக்கிறது. இதில்  6,96,666 கோடி ரூபாய் மொத்தமாக தமிழ கத்துக்கு ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது. செஸ் வரி வசூலிப்பில் 2014 முதல் 57 ஆயிரத்து 557 கோடி வந்திருக்கிறது. இதில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) சாலைகள் போடுவதற்கு ரூபாய் 37 ஆயிரத்து 965 கோடி தமிழகத்திற்கு ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. தவிர, பள்ளிகள் கட்ட 11 ஆயிரத்து 116 கொடுத்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.

நிதி நெருக்கடிக்கு இடையே நலத்திட்ட உதவிகள்

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் வெள்ளியன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில்தான் 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. 10 ஆண்டு காலம் நடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால் ஏற்பட்டிருந்த நிதி நெருக்கடி, அடுத்து வந்த கொ ரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி யிலும் திறமையாக சமாளித்தோம். கொரோனா பெருந்தொற்று கால நிவாரணமாக ரூ. 4 ஆயிரம் விகிதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத் துள்ளோம். மகளிருக்கு கட்டணமில்லா பயணம் திட்டம், திமுக அரசால் ஒருபோ தும் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ. 1,000 பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கி டையில் தமிழகம் இரு பேரிடர்களை சந்தித்துள்ளது. பேரிடரில் பாதிக்கப் பட்ட தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இன்றுகூட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இப்படி மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு அதற்கான ஊக்கத்தை, இந்த சுமை களில் இருந்து மாநில அரசுக்கு உதவும் வகையில் எதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நேற்று தமிழகத்துக்கு வழங்கக்கூடிய வரிவருவாய் குறித்து சில கருத்துக் களை தெரிவித்துள்ளார். அதுகுறித்து பேச வேண்டியது எனது கடமை. தமிழகத்திற்கு கொடுத்தது  ரூ. 4.75 லட்சம் கோடிதான் ஒன்றிய அரசு 2014 - 15ஆம் ஆண்டு முதல் 2022 - 23 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூ. 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கி யுள்ளது. இந்த ரூ. 4.75 லட்சம் கோடி யில் ரூ. 2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வா கவும், அதேபோல ரூ.2.28 லட்சம் கோடி என்பது தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய மானியங்கள் மற்றும் உத வித்தொகை அடிப்படையில் வழங்கப் பட்டவை ஆகும். அதேநேரத்தில் நேரடி வரிவருவா யாக தமிழகத்தில் இருந்து ரூ. 6.23 லட்சம் கோடியை ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவு களையும் அவர்கள் பகிர்ந்து கொள்ள வில்லை. தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் அங்கிருந்து தமிழகத்துக்கு கிடைப்பது 29 காசுகள்தான். இதை ஏற்கனவே சட்டசபையில் கூறி யுள்ளேன். 

ரூ. 2.23 லட்சம் தந்த  உ.பி.க்கு ரூ. 15.35 லட்சம் அள்ளியிறைப்பு

ஆனால், பாஜக ஆளும் மாநிலங்க ளில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும்  மாறுபட்டு உள்ளது. உதாரணத்துக்கு 2014 - 15ஆம் ஆண்டு முதல் 2022 - 23ஆம் ஆண்டு வரை பார்த்தால் பாஜக ஆளும் மாநிலமான உத்த ரப்பிரதேசத்தில் இருந்து ரூ. 2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு சென்ற நிலையில், அந்த மாநிலத்துக்கு ஒன்றிய அரசு மூலமாக ரூ.15.35 லட்சம் கோடி திரும்பக் கிடைத்துள் ளது. 12-ஆவது நிதிக்குழு சமயத்தில் ஒன்றிய அரசின் வரியில் இருந்து தமிழகத்துக்கு 5.305 சதவிகிதம் வரிப் பகிர்வாக நிதி ஆணையம் வழங்கியது. அதுவே, தற்போதுள்ள 15-ஆவது நிதிக் குழுவை எடுத்துக் க்கொண்டால், அது 4.079 சதவிகித மாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய உரிய நிதி வரவில்லை என்பதற்கு உதாரணமே இந்த புள்ளி விவரங்கள். இந்திய அளவில் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 6.124 சதவிகித மக்கள் தொகை கொண்ட தமிழகத்துக்கு மத்திய நிதி ஆணையத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தொகையில் 4.079% மட்டுமே கிடைக்கிறது என்றால், நமக்கு கிடைக்க வேண்டிய சரியான தொகை கிடைக்கவில்லை என்பதே அர்த்தம்.

10 சதவிகித செஸ், சர்சார்ஜ் 28 சதவிகிதமாக அதிகரிப்பு

செஸ் மற்றும் கூடுதல் வரியை தனிப்பட்ட வருவாயாக ஒன்றிய அரசு பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த வகையின் கீழ் 2011-12ல் 10.04 சதவிகிதத்தை ஒன்றிய அரசு வரியாக பெற்றது. அதையே, தற்போது 28.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு தனிப்பட்ட வருவா யாக இது கிடைக்கிறது. தமிழ கத்துக்கு கிடைக்க வேண்டிய தொகை குறைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஜிஎஸ்டி அமல் படுத்தும்போது மாநிலங்களுக்கான பங்கின் வருடாந்திர வளர்ச்சி என்பது 14 சதவிகிதமாக இருக்கும் என்றார்கள். ஆனால், அந்த அளவு க்கு வரவில்லை என்பது நிச்சயம். இதனால், தமிழகத்தின் நிதி ஆளு மைக்கான உரிமையை இழந்தி ருக்கிறோம். இதன்காரணமாக தமி ழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை நீடிக்க 2022-க்கு பிறகு கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு நீடிக்கவில்லை.

தமிழக திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை

சென்னை மெட்ரோ 2-ஆவது கட்டத் திட்டம் ரூ. 63 ஆயிரத்து 246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50 சதவிகித நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டினார். ஆனால், இன்றுவரை அதற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. அதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தரப்பிர தேசம், தில்லி, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப் பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் 10 ஆயிரம் கோடி அளவிற்கு வழங்கப் பட்டுள்ளது. ஆனால், சென்னை மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரை வெறும் 3 ஆயிரத்து 273 கோடி ரூபாய்தான் ஒன்றிய அரசால் ஒதுக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அளவில் ரயில்வே திட்டங்களில் தமிழ் நாட்டுக்கு கிடைக்கக்கூடிய சதவிகி தம் என்பது 2.05 சதவிகிதம் என்று தான் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 18 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும்  மாநில அரசே அதிக நிதி

ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ. 72 ஆயிரம் கொடுக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ரூ. 1.68 லட்சம் கொடுக்கிறது. அதேபோல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ. 1.50 லட்சம் கொடுக்கிறது. ஆனால், தமிழக அரசு ரூ. 7 லட்சம் தருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்க ளாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதி யுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிக மான பங்களிப்பை வழங்குகிறது. பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என 10 ஆண்டு களாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவில்லை. மிக்ஜம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்க வில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ. 2,027 கோடி வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடக்கிறது. ஒன்றிய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாக பணிகளை முடிக்க முடியும்.”  இவ்வாறு தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு செய்தது என்ன? : முதல்வர் ஸ்டாலின் கேள்வி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

  1.  மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம்,
  2. காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு,
  3.  புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய்,
  4.  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய்

- எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிடமாடல் அரசு.ஆனால், இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.