tamilnadu

img

துணிச்சல்மிக்க துர்காவதி

‘துர்கா பாபி’ என்றழைக்கப்பட்ட துர்காவதி தேவி 1907 அக்.7 அன்று  அலகாபாத்தில் பிறந்தவர்.  துர்காவதிக்கு 11 வயதில், பகவதி  சரண் வோரா (வயது 15) உடன் திருமணம் நடந்தது.  பகவதி சரண் , பகத்சிங் உள்ளிட்ட புரட்சி யாளர்களுடன் பழக்கம் கொண்டவர். பகவதி சரண் கொல்கத்தாவில் இருந்த 1928 டிசம்பர் 17 அன்று, ஆங்கிலேய  அதிகாரி சாண்டர்ஸ் கொல்லப்பட்டார்.  துர்கா தனது 3 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த போது,  பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகிய மூவருக்கும் அடைக்கலம் கொடுத்தார்.  லாகூரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், துர்கா தேவி  பகத்சிங்கின் மனைவி போல் வேடமிட்டு, அவரை லாகூரிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்.  1930 அக்.8 அன்று, தெற்கு பாம்பேயில் ஆங்கிலேய காவலர், அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது, பகத்சிங் தூக்குத் தண்டனைக்கு பழிக்குப் பழியாக நடந்தது.  1932 செப்டம்பரில் துர்காவதி  சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ரவி ஆற்றங்கரையில் வெடிகுண்டு தயாரிப்புப் பணியின் போது நிகழ்ந்த வெடிவிபத்தில்,  பகவதி சரண் உயிரிழந்தார்.    விடுதலையான பிறகு, 1935 இல்  லக்னோவில் ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை துவக்கி, கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். 1999 அக்.14 அன்று காலமானார்.