அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ஞானசேகரன் குற்றவாளி; மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
தண்டனை விவரம் ஜூன் 2ல் அறிவிப்பு
சென்னை, மே 28 - சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், ஞானசேகரன் குற்ற வாளி என சென்னை மகளிர் நீதி மன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி தீர்ப் பளித்துள்ளார். மேலும், ஞானசேகரன் மீது 11 சட்டப்பிரிவுகளின் கீழ் சுமத்தப் பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டு களும் நிரூபணமாகி இருப்பதாக கூறியிருக்கும் நீதிபதி, தண்ட னை விவரம் ஜூன் 2 அன்று அறி விக்கப்படும் என்றும் தெரிவித்துள் ளார். இந்த வழக்கில் 5 மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எஸ்எப்ஐ போராட்டம் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், கடந்த டிசம்பர் 23 அன்று 19 வயதான இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இப்பிரச்ச னையில் உடனடியாக போராட்டத் தில் இறங்கிய இந்திய மாணவர் சங்கத்தினர், குற்றவாளியை கைது செய்து கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று பல் கலைக்கழகத்தை முற்றுகை யிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் அனைத்து மக ளிர் காவல்துறையினர், விரைந்து செயல்பட்டு, புகார் கிடைத்த சில மணி நேரங்களிலேயே, பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசார ணைக்கு மாற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிசம்பர் 28 அன்று உத்தரவிட்டது. இதனிடையே, ஞானசேகரனை 2025 ஜனவரி 5 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் சென்னை காவல் துறை கைது செய்தது. 100 பக்க குற்றப்பத்திரிகை ஞானசேகரனுக்கு எதிராக பிப்ரவரி 24 அன்று சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் 100 பக்க குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசார ணை மார்ச் 7-ஆம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 11 குற்றச்சாட்டுகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை சட்டவிரோத மாக கட்டுப்பாட்டில் வைத்திருந்து மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடு மை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன் எஸ் சட்டத்தின் 11 பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, இந்த வழக்கில் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக கடந்த ஏப்.23 அன்று சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்த னர். ஞானசேகரன் மீதான குற்றச் சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசுத் தரப்பில் 75 சான்று ஆவ ணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதி விசாரணை இந்த வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் கடந்த மே 20 முதல் மே 23 வரை இரு தரப்பிலும் 3 நாட் களில் தங்களது இறுதி வாதங் களை நிறைவு செய்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி. மேரி ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், அறிவியல் ரீதியான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக வும் கூறியதுடன் அதிகபட்ச தண்ட னை வழங்க வேண்டும் என வாதிட்டார். தீர்ப்பு இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி புதனன்று (மே 28) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஞானசேகரனின் கெஞ்சல் முன்னதாக தண்டனை விவரம் குறித்து ஞானசேகர னிடம் நீதிபதி கேட்டபோது, “தனக்கு வயதான தாய் இருப்ப தாகவும், தனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதா லும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென” குற்ற வாளி ஞானசேகரன் நீதிபதியிடம் கண்ணீர் மல்க கெஞ்சினார். அரசுத் தரப்பில் எதிர்ப்பு “தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று ஞானசேகரன் தெரிவித்தபோது அதற்கு அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதோடு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தண்டனை விவரங்கள் ஜூன் 2 அன்று வெளியாக உள்ளன. வழக்குகள் நிலுவை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமன்றி ஞானசேகரனுக்கு எதிராக மொத்தம் 35 குற்ற வழக்குகள் உள்ளன. அவற்றில் பல வழக்குகளில் தண்டனையும், சில வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ள ஞானசேகரனுக்கு எதிராக- தற்போதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.