புவியின் வெப்பம் குறை பிரசவம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கி யத்தைப் பாதிக்கிறது என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் கருவுற்றிருக்கும்போது உயர் வெப்பநிலை மற்றும் காற்றுமாசு பிறக்கும் குழந்தைகளில் ஆயுட்கால குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தாயின் கருவில் இருக்கும் சிசுக்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கிறது.
அதிகமாகும் குழந்தை உடற்பருமன்
புவி வெப்ப உயர்வினால் எடை கூடுதலான குழந்தைகள் பிறக்கின்றன. இது பிற்கால வாழ்வில் அவர்களை உடற்பருமனுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது. வெப்ப உயர்வு குழந்தைகள் முன்கூட்டியே பிறக்கக் காரணமாகிறது. இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் குறைபாடுகளுடன் வாழும் நிலையை ஏற்படுத்துகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில் இளம் குழந்தைகள் மருத்துவமனைகளில் அவ சரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதும் அதிகமாகிறது. காட்டுத்தீ மற்றும் இடங்களில் குழந்தைகள் இரண்டு மடங்கு கூடுதலான அதிதீவிர பிறவிக்குறைபாடுகளுடன் பிறக் கின்றனர். புதைபடிவ எரிபொருட்களை எரிப்ப தால் உருவாகும் குறைவான காற்றுமாசுகூட பெண்களின் குழந்தை பெறும் திறனை குறைக் கிறது. இதனால் அவர்களின் மலட்டுத்தன்மை அதிகரிக்கிறது.
எச்சரிக்கும் ஆய்வுமுடிவுகள்'
மகப்பேறு மற்றும் பிறப்பிற்கு முந்தைய தொற்றுநோயியல் ( Journal Paediatric and Perinatal Epidemiology) என்ற ஆய்வித ழின் சிறப்புப்பதிப்பில் அமெரிக்கா முதல் டென்மார்க் வரை, இஸ்ரேல் முதல் ஆஸ்திரேலியா வரை நடத்தப்பட்ட ஆய்வு களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கரு உருவாகும் நிலை முதல் குழந்தைப் பிறந்து விடலைப்பருவம் அடையும்வரை கால நிலை மாற்றத்தின் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று பாஸ்டன் பொதுசுகாதாரப் பள்ளிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையின் தொகுப்பு ஆசிரியர்கள் பேரா கிரிகோரி வெலீனியஸ் (Prof Gregory Wellenius) மற்றும் அமிலியா வெஸ்ஸெலிங் (Amelia Wesselink) கூறுகின்றனர்.
எங்கேயும் எல்லோரையும்'
குழந்தைப் பிறப்பு மற்றும் குறைப் பிரசவம் போன்றவை எல்லோரையும் பாதிக்கும் ஒன்று. காலநிலை மாற்றம் வரும் நாட்களில் மோசமாகும்போது இந்தப் பாதிப்புகள் அதிக அளவில் அதிதீவிரமாக ஏற்படும். மற்ற பிரச்சனைகள் போல இல்லாமல் இது வருங்காலத்தில் அல்ல நம்மை இன்றே பாதிக்கின்றன. இதனால் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கிரிகோரி கூறுகிறார்.
குண்டுக் குழந்தைகள்
வெப்ப உயர்விற்கும், பிறந்த குழந்தையின் முதல் ஆண்டில் ஏற்படும் உடற்பருமனிற்கும் நேரடித்தொடர்பு இருப்பதை இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 200,000 குழந்தைப் பிறப்புகள் ஆராயப் பட்டதில் 20% குழந்தைகளில் அதிக வெப்பம் இருந்த இரவுகளில் அவர்களில் முதலாண்டில் உடல் எடை 5% வேகமாக அதிகரிக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஹீப்ரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடற்பரும னிற்கும் வெப்ப உயர்விற்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்துள்ளனர். இது குழந்தை கள் விடலைப்பருவத்தை அடையும்போது உடற்பருமனை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எடை கூடுவதற்குக் காரணம் சுற்றுப்புற வெப்பநிலையை விட உடல் வெப்ப நிலை குறைவாக இருப்பதே. அப்போது உடற்செயல்களுக்காக இவர்களின் உடலில் குறைவான கொழுப்பே எரிக்கப்படுகிறது.
காட்டுத்தீயும் பிறவிக் கோளாறுக் குழந்தைகளும்'
உலகளவில் இன்று 18% குழந்தைகள் உடற்பருமனுடன் வாழ்கின்றனர். கரு உருவா வதற்கு முந்தைய மாதத்தில் காட்டுத்தீயால் பாதிக்கப்படும் தாய்மார்கள் கேஸ்ட்ரோஸ்கி ஸிஸ் (gastroschisis) என்ற பிறவிக்குறை யுடன் குழந்தைகளைப் பெறும் ஆபத்து இரண்டு மடங்கு உள்ளது என்று கலிபோர்னி யாவில் நடைபெற்ற ஆய்வுகள் கூறுகின்றன. இது குழந்தைகளின் குடல் மற்றும் சில சம யங்களில் மற்ற உடல் உறுப்புகள் தோலில் இருக்கும் துளையின் வழியே நீந்தி வெளி யில் வரும் ஒரு பிறவிக்கோளாறு ஆகும். இரண்டு மில்லியன் குழந்தைப் பிறப்புகள் ஆராயப்பட்டன. இதில் காட்டுத்தீ மற்றும் பகுதியில் 15 மைல் சுற்றளவிற்குள் இருக்கும் 40% தாய்மார்களுக்குப் பிரசவத்தின்போது பாதிப்புகள் ஏற்பட்டன. காட்டுத்தீயால் ஏர்படும் காற்றுமாசு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் கருவில் இருக்கும் சிசுவிற்கு பாதிப்பை ஏர்படுத்துகிறது. தீ ஏற்படும் இடங்களுக்கு மிக அருகில் இருக்கும் 28% தாய்மார்கள் அவர்களின் முதல் மூன்றுமாத பேறுகாலத்தில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிறவிக்குறைபாட்டுடன் உள்ள குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். அரிதாக இருந்தாலும் அமெரிக்காவில் குடல் பிறவிக்கோளாறுகளுடன் ஆண்டிற்கு 2000 குழந்தைகள் பிறக்கின்றனர். உலகளவில் இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அடிகரிக்கிறது. வரும் ஆண்டுகளில் காட்டுத்தீ ஏற்படுத்தும் அழிவுகளுக்கு மனிதன் கூடுதலாக ஆளாகவேண்டியிருக்கும் என்று கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானி போ யெங் பார்க் (Bo Young Park) கூறுகிறார்.
வெப்ப உயர்வும் குறைப் பிரசவமும்'
வெப்ப உயர்விற்கும் குறைப்பிர சவத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு முதல்முறையாக ஆராயப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 2005-2014 ஆண்டுகளில் கருவுற்ற ஒரு மில்லியன் தாய்மார்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இவர்களில் 3% பெண்கள் உரிய காலத்திற்கு 37 வாரங்களுக்கு முன்பே தங்கள் குழந்தைகளை பெற்றனர். வெப்பம் மிகுதியாக இருந்த ஐந்து இடங்களில் பிரசவம் நிகழ்வதற்கு ஒரு வாரம் முன்பு குறைப் பிரசவம் 16% அதிகமாக நடந்தது. புவி வெப்பம் உயர்வதாலும் வெப்ப அலைத்தாக்குதல்கள் வருங்காலத்தில் அதிகம் ஏற்படும் என்பதாலும் இப்பிரச்சனை எதிர்காலத்தில் இன்னும் மோசமாகும் என்று சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி எட்வர்ட் ஜெகசோத்தி (Edward Jegasothy) கூறுகிறார். டெக்சாஸ் ஹாரிஸ் கவுண்டியில் (Harris County) 2007-2011 காலகட்டத்தில் 200,000 குழந்தைப் பிறப்புகள் ஆராயப்பட்டன. இப்பகுதி ஹூஸ்டன் உள்ளடக்கிய அமெரிக்காவின் வெப்பம் மிகுந்த பிரதேசம். இங்கு வாழ்ந்த பெண்கள் மிக அதிக வெப்பநிலை நிலவிய ஒரு நாளை தங்கள் பிரசவகாலத்தில்போது எதிர்கொண்டனர். கோடைவெப்பத்தின் சாதனையளவு வெப்பநிலை அப்போது நிலவியது. வெப்ப மான அந்நாட்களில் குறைப் பிரசவத்திற்கான வாய்ப்புகள் வெப்பம் குறைவான மற்ற நாட்களை விட 15% அதிகமாக இருந்தது. ஆனால் இந்த பாதிப்புகள் 28 வாரங்களுக்கு முன்பே குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை களை மூன்று மடங்கு அதிகமாகப் பாதித்தது. இதேநிலை 20% ஏழைத்தாய்மார்களையும் பாதித்தது.
தாய்மார்களுக்கும் வானிலை எச்சரிக்கை
காலநிலை மாற்றத்தின் கெடுதிகளையும் வானிலை எச்சரிக்கைகளில் உட்படுத்தி குறிப்பாக தாய்மார்களுக்கு வெப்ப அலைத் தாக்குதல் போன்ற அதிதீவிர காலநிலை குறித்த முன்னரிவிப்புகளை செய்யவேண்டும் என்று கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் லாரா குஷிங் (Lara Cushing) தலைமையில் அமைந்த ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். வெப்ப அதிகரிப்பினால் குறைப்பிரசவம் ஏற்பட ஆக்ஸிடோஸின் என்ற கர்ப்பகால ஹார்மோனின் அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த ஆய்வுகளின் முன்னோடியாக 2020ல் 34 மில்லியன் குழந்தைப் பிறப்புகள் ஆராயப் பட்டன. இதன் மூலம் வெப்ப உயர்வு, காற்று மாசு அதிகரிப்பு போன்ற சூழல்சீர்கேடுகளால் பெண்களில் குறைப் பிரசவம், குறைவான எடையுடன் குழந்தை பிறப்பது, குழந்தைகள் இறந்தே பிறப்பது போன்ற அதிதீவிர பாதிப்புகள் அதிகரிக்கிறது என்று ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் மற்றும் ஓய்வுபெற்ற மகப்பேறு சுவாசப்பிரிவு நிபுணர் ப்ரூஸ் பேக்கர் (Bruce Bekkar) கூறுகிறார்.
அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகள்
வெப்பம் மிகுந்த நாட்கள் அதிகமாகும் சூழ்நிலையில் இளம் குழந்தைகள் மருத்துவமனைகளில் அவசர உதவி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன என்பது நியூயார்க் நகரில் நடந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் வெப்பநிலை 7 டிகிரி ‘சி’ உயர்ந்தபோது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வழக்கத்தை விட 2.4% மருத்துவமனைகளில் அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடலைப்பருவத் தினரைக் காட்டிலும் இளம் குழந்தைகள் அதிக அளவில் நீர் மற்றும் உடல் திரவ இழப்பிற்கு ஆளாகின்றனர்.
புதைபடிவ எரிபொருட்கள் ஏற்படுத்தும் மலட்டுத்தன்மை'
டென்மார்க்கில் 10,000 இளம் தம்பதியினரி டம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் புதைபடிவ எரிபொருட்கள் மூலம் ஏற்படும் நுண்துகள் மாசு அதிகமாக இருக்கும் நாட்களில் பெண்கள் கருவுருவதற்கான வாய்ப்புகள் 8% குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காற்றுமாசு அதிகமுள்ள இடங்க ளில் பெண்கள் கருத்தரிப்பது இயல்பை விட ஐந்து மடங்கு குறைவாக இருக்கிறது. மற்ற எல்லா சமூக நிகழ்வுகள் போலவே இதிலும் குறைந்த வருமானமுள்ள, வசதி களற்ற பெண்களே அதிகம் பாதிக்கப்படு கின்றனர். இது உலகில் இன்று காணப்படும் சமூக அநீதியை, ஆரோக்கியத்தில் நிலவும் சமத்துவமற்ற நிலையை சுட்டிக்காட்டுகிறது. சூழல் சீரழிவுகளால் பூமியில் புதிதாகப் பிறக்கும் தலைமுறை பல்வேறு சிக்கல்களால் பலவீனமடைந்துவரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் மனிதகுலத்திற்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. புவி வெப்ப உயர்வைக் குறைக்க உடனடியாக செயலில் இறங்காவிட்டால் நாளை பூமி பிறவிக்கோளாறுகளுடன் வாழும் மனிதர்க ளால் நிறையும்.