சென்னை, மே 31 - ஊதிய ஒப்பந்தத்தில் பே மேட்ரிக்ஸ் முறை கொண்டு வந்தால் மட்டுமே சிஐடியு ஏற்றுக் கொள்ளும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் தெரி வித்துள்ளார். அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் 56வது ஆண்டு பேரவை மே 29-30 தேதிகளில் சென்னை யில் நடைபெற்றது. இந்த பேரவையில் கே.ஆறுமுகந யினார் பேசியது வருமாறு: திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று தொழி லாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பிரச்சனைகள் அதி கரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் கொதிப் பில் உள்ளனர். சிஐடியு தலைமை செயலகம் நோக்கி நடத்திய போராட்டத்தையடுத்து ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை அரசு நடத்தி யது. இந்தப் பேச்சுவார்த்தை யில் ஊதிய கணக்கீடு (பே மேட்ரிக்ஸ்) முறையில் ஊதிய உயர்வு வழங்க கோரியுள்ளோம். அதற்கு 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று அமைச்சர் கோரினார். அந்தக் காலக்கெடு முடிந்து விட்டது. பே மேட்ரிக்ஸ் முறை கொண்டு வந்தால் மட்டுமே ஒப்பந்தத்தை சிஐடியு ஏற்றுக் கொள்ளும்.
பேட்டா விவகாரம்
வரவுக்கும் செலவுக்கு மான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்காமல் போக்குவரத்து ஊழியர் பிரச்சனையை தீர்க்க முடியாது என 2013 ஆம் ஆண்டிலிருந்து வலி யுறுத்தி போராடி வந்தோம். அதனை ஏற்று நிதியை ஒதுக்க அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டு மல்ல பேருந்தையே இலவச மாக இயக்கினாலும் தவறில்லை. இலவசமாக இயக்குவதால் தொழிலா ளர்கள் பாதிக்கப்படக் கூடாது. பேட்டா விவகாரத் தில் அரசு கூறியதை ஏற்க வில்லை. இதில் தீர்வு காண பேசியுள்ளோம். விரைவில் நல்ல அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்ப் பார்க்கலாம். பேருந்துகளை இலவசமாக இயக்கினால் பொருளா தாரம் வளரும் என்பதே நடை முறை அனுபவம். பொரு ளாதாரம் உயர்ந்தால் மாநிலத்தின் ஜிடிபி உயரும், பண சுழற்சி ஏற்பட்டு அரசுக்கு வரிவருவாய் பெரு கும். இந்தியா முழுவதும் பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில், கேரளம், தமிழகத்தில் மட்டும் குறை வாக உள்ளது. அதற்கு காரணம் இந்த மாநிலங்களில் அமல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்தான் காரணம் என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. தொழிலை பாதுகாக்க, தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க அமைப்பை வலுப்படுத்து வோம். இவ்வாறு அவர் பேசி னார்.