சென்னை,மார்ச் 26- மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கிறது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கிறது. நாடு முழுவதும் சுமார் 25 கோடி பேர் பங்கேற்பர் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து சேவை கள், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் மீது அக்கறைக் கொண் டுள்ள அரசாக இருந்தால் ஒன்றிய அரசு, தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு கண்டிருக்க வேண்டும். கோரிக்கைகள் மிகவும் நியாயமானதாக இருப்பதால் பொது மக்களின் ஆதரவும் பரவலாக இப்போராட்டத்திற்கு அதிகரித்து வரு வதைக் காணமுடிகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் இப்போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் பங்குகொள்வர் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.