சென்னை, டிச. 17- கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆனந்த் அரசு என்பவர் கடந்த மாதம் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் துறையில் ஆன்லைன் விளை யாட்டு இணையதளம் மூலமாக லட்சக் கணக்கில் தன்னை மோசடி செய்துள்ள தாக புகார் அளித்தார். புகாரின்பேரில் மென்பொறியாளர் சசிகுமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் மென் பொறியாளராக பணியாற்றியபோது அங்கு உடன் பணியாற்றிய சென்னை யைச் சேர்ந்த சாய்குமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், முகமது ஆசிப் என 5 பேர் ஒன்றிணைத்து வெளிநாடு களில் இருக்கும் ஆன்லைன் விளை யாட்டுக்களை இந்தியாவில் விளை யாடச் செய்து அதன் மூலம் பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து 10 கோடிக்கும் மேல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறை தலைமையக சைபர் கிரைம் கண்காணிப் பாளர் சிபி சக்கரவரத்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் தலைமறைவாக இருந்த மற்ற 4 குற்றவாளிகளையும் தனிப் படை காவல் துறையினர் கைது செய்த னர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரஷ்யாவில் இருந்து இயங்கும் ஒன் எக்ஸ் வகை ஆன்லைன் விளையாட்டுகளை இந்தியா வில் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தி அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இயங்கும் மோசடி கும்பலுக்கு தமிழகத்தில் இவர்கள் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக சமூக வலைதளங்கள், மொபைல் குறுஞ்செய்தி மூலம் இது போன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்தி இவர்கள் ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ள தும் தெரியவந்தது. ஆரம்பத்தில் விளையாட செல்லும் நபர்களுக்கு இவர்கள் தங்க ளது சொந்தப் பணத்தைக் வங்கிகள் மூலம் அனுப்பி அவர்களை நம்ப வைத்து பிறகு அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
குறிப்பாக வெளி நாடுகளில் இருந்து இயங்கும் இந்த வகை விளையாட்டுகளுக்கு கைது செய்யப்பட்ட 5 பேரும் தங்களது சொந்தப் பணத்தைப் கொடுத்து விளை யாட்டுகளுக்கான பாஸ்வேர்ட் மற்றும் ஐடி பெற்று தமிழகத்தின் மோசடி சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். மோசடி செய்யும் பணத்தை பல்வேறு வங்கி கணக்கிற்கு அனுப்பி பின்பு அதனை பிட்காயின் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து, வெளி நாட்டு மோசடி கும்பலுக்கு அனுப்பி யுள்ளனர். பின்னர் வெளிநாட்டில் இயங்கும் மோசடி கும்பல் அந்தந்த நாட்டு பணமாக மாற்றி இந்த வகை மோசடியை அரங்கேற்றி வந்துள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோல தமிழகத்தில் மட்டும் 10,000க்கும் அதிக மான நபர்களிடமிருந்து சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ள னர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 லேப்டாப், 1 கம்ப்யூட்டர், 10 செல்போன்கள், 27 ஏடிஎம் கார்டுகள், 4 பென்டிரைவ்கள், 340 சிம்கார்டுகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. மேலும், தமிழகம் மட்டு மல்லாது பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று தரகர்கள் செயல்படுவ தும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. அவர்கள் குறித்த விசாரணை யில் சைபர் கிரைம் காவல் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.