tamilnadu

img

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்க!

சென்னை, ஜன. 24- தேர்தல் வாக்குறுதிப் படி ஒப்பந்தத் தொழிலா ளர்களை நிரந்தரம் செய்ய  வேண்டும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வலியுறுத்தி னார். ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள தலைமை அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் செவ்வா யன்று (ஜன. 24) நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், பொருளாளர் எம்.ஏழு மலை, துணைப் பொதுச்  செயலாளர்கள் கே.சண்மு கம், ஆர்.மோகன்,  துணைத் தலைவர்கள் எஸ்.லூர்துசாமி, கே.சுப்பு ராஜ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு  மாநில பொதுச் செயலாளர்  ஜி.சுகுமாறன் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு,  மாநில அரசின் கட்டுப் பாட்டிலுள்ள கூட்டுறவு வங்கி, உணவு விநியோகத் துறை என அனைத்து கூட்டுறவு துறைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் மாநில  அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறை களையும் நயவஞ்சகமாக ஒன்றிய அரசு தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.  நுகர்பொருள் வாணிப கழகத்தை கூட்டுறவுத் துறை யுடன் இணைத்தால் அது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நட்டத்தை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். ஒன்றிய பாஜக அரசின்  இந்த தவறான நடவடிக் கையை கண்டித்தும், தேசத்தின் நலன், ஏழை எளிய மக்களின் நலன், விவ சாயிகளின் நலன் காக்க வும், மாநில அரசின் உரிமையை பாதுகாக்கவும்  தொழிலாளர்கள் போராடு கிறார்கள். எனவே மாநில அரசு இதை தடுத்து நிறுத்த  முன்வர வேண்டும் என்றும்  சுகுமாறன் கேட்டுக்கொண் டார். கடந்த தேர்தலின் போது  திமுக தனது தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டு களுக்கு மேல் பணி யாற்றிய ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நியம னம் செய்வோம் என்று அறிவித்துள்ளது. அதன டிப்படையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்பு பணிய மர்த்தப்பட்டு 10 ஆண்டு களுக்கும் மேலாக பணி யாற்றும் ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நியமனம்  செய்வதில் என்ன பிரச்சனை  இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.