சிவகங்கை, ஏப்.19- 40 வீரர்களை பலி கொண்ட புல் வாமா தாக்குதல் குறித்து இப்போதா வது பிரதமர் மோடி வாய் திறப்பாரா? என்று ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) சென்ற வாகனங்களின் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய காரு டன் தற்கொலைப் படை தீவிரவாதி மோதச் செய்து நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சமீபத்தில் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சிஆர்பிஎப் நிர்வாகத்தின் தவறு மற்றும் உதாசீனத்தாலும் திற மையின்மையின் காரணமாகவும் 40 வீரர்களை பலிகொடுத்துள்ளோம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற் படுத்திய சத்யபால் மாலிக்கின் பேட்டி குறித்து, பிர தமரும் ஒன்றிய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள தொல்லி யல் அருங்காட்சியகத்தை திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், அவரது துணைவியார் ரீடா, புரட்சித்தம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீர பாண்டி, ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி, ஈஸ்வரன், நீலமேகம், ஈஸ்வ ரன், பூவந்தி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் மகா லிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுக்கு அருங்காட்சியக அதி காரிகள் விளக்கிக் கூறினர். பின்னர் பார்வையாளர் நோட்டில் ஜி.ராமகிருஷ் ணன் தனது கருத்தை பதிவுசெய்தார். இதன்பிறகு ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கீழடி அருங்காட்சியகத்தை சிறப்பாக கட்டமைத்த தமிழக அரசையும் முதல் வர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டு கிறேன். 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தொன்மைக்கால தமிழர் நாக ரிகம் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள் ளது. இளைஞர்கள் நமது தொன்மை யான நாகரிகத்தை தெரிந்து கொள்ள வேண்டும். கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டதில் சாதி, மத அடை யாளம் கிடையாது. கீழடியை வெளிப் படுத்த ஒன்றிய பாஜக அரசு தடை யாக இருந்தது. ஒன்றிய அரசின் தடை களை முறியடித்து தமிழர்களின் தொன் மை வரலாற்றை வெளிப்படுத் திய தமி ழக அரசுக்கு பாராட்டுக்கள் என்றார். மேலும் கூறுகையில், புல்வாமா தாக்குதலின் போது வீரர்களை விமா னத்தில் அழைத்துச் சென்றிருந்தால், உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என கூறிய அப்போதைய காஷ்மீர் ஆளு நரை, இதுகுறித்து வாய் திறக்க வேண் டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்த புல்வாமா தாக்குதல் குறித்து பிர தமர் இப்போதாவது வாய் திறக்க வேண்டும். அவர் வாய் திறப்பாரா? என்று ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.