tamilnadu

img

ஈஷா யோகா மையமா? மர்ம தேசமா?

கோயம்புத்தூர், ஜன. 2- ஈஷா யோகா மையம் சம்பந்த மாக அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால், பாஜகவின் தேசிய தலை வர் நட்டா வருகிறார். ஒன்றிய அமைச் சர்கள், தலைவர்கள் வந்து செல் கின்றனர் என்பதால் தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது  என்பதை  போல ஈஷா மையம் செயல்படு கிறது. சுபஸ்ரீ மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள தால், மாநில அரசு விசாரணைக்குழு வை  அமைத்து இச்சம்பவம் குறித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.  கோவை ஈஷா யோகா மையத் தில் யோகா பயிற்சிக்காக வந்த பெண் சுபஸ்ரீ, ஈஷாவில் இருந்து வெளியேறி தலைதெறிக்க சாலை யில் ஓடினார். பின் சந்தேகத்திற்கு இடமான வகையில் மீண்டும் ஈஷா மையம் உள்ள பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தமிழகத்தையே உலுக்கி யுள்ளது. சுபஸ்ரீ உயிரிழந்த விவகா ரத்தில் உரிய விசாரணை நடத்த  வலியுறுத்தி கோவையில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப் பின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங் களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கி னார். இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செய லாளர் ரவிக்குமார், தந்தை பெரி யார் திராவிடர் கழக தலைவர் ஆறுச் சாமி, திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுதா உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.  ஈஷா மையத்தில் நடைபெறும் மர்மங்களை வெளிக்கொணர வேண்டும். சுபஸ்ரீ மரணத்தில் நீதி  வேண்டும். போலிச்சாமியார் ஜக்கி  வாசுதேவை கைது செய்ய வேண்டும் என ஆவேச முழக்கங்களை எழுப்பி னர்.  முன்னதாக, பி.ஆர்.நடராஜன்  எம்பி இச்சம்பவம் குறித்து செய்தி யாளர்களிடம் பேசுகையில், ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற  சுபஸ்ரீ  டிசம்பர் 18ஆம் தேதி யில் இருந்து காணவில்லை. சிசிடிவி காட்சிகளில்  யோகா உடையோடு இருட்டுபள்ளம் பகுதியில் ஓடுவது பதிவாகி உள்ளது. அந்த பெண் யாருக்கு பயந்து ஒடினார்.  இந்த ஒரு வார காலத்தில் அந்த  மையத்தில் நடந்தது என்ன? 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசார ணை நடத்தப்படுகிறது என போலீ சார் தெரிவித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை சடலமாக  மீட்கப் பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எரியூட்டப்பட்டதேன்?

அதேநேரத்தில், அவரது உடல்  உடனடியாக உடற்கூறு ஆய்வு  செய்து, அவர்களின் குடும்ப வழக்கத் திற்கு மாறாக எரியூட்டப்பட்டு இருக் கின்றது. இது பெரும் சந்தேகத்தை  ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் ணை துரத்தியது யார்?  அவர்  ஓட  வேண்டிய அவசியம் என்ன? தமிழக காவல் துறை இது குறித்து உடனடி யாக விசாரணை நடத்த வேண்டும். இதற்கு தனியாக விசாரணை நடத்த விசாரணைக்குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். 

காவல்துறைக்கு அழுத்தம்

ஈஷா மையத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றதால் அந்த  பகுதி மக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள் ளது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா  அங்கு வந்து தங்கிச் செல்கின்றார். தொடர்ந்து ஒன்றிய அரசின் அமைச் சர்கள், பாஜகவின் தலைவர்கள் வந்து செல்வதால் தங்களை யாரும்  கேள்வி கேட்க முடியாது என ஈஷா  மையத்தின் நிர்வாகம் நினைக்கிறது. தமிழ்நாட்டின் காவல் துறையை, இந்திய நாட்டின் சட்டங்களை மதிக் காமல் ஈஷா நிர்வாகம் செயல்படு கின்றது. உண்மையை வெளிக் கொணராமல் இருக்க கோவை காவல் துறைக்கு  ஈஷா மையம்  அழுத்தம் கொடுக்கின்றது என குற்றம்சாட்டினார்.