சிஐடியு நிர்மல் பள்ளிக்கு நிதியளிப்பு
கரூர், மே 31- கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையத்தில் இயங்கி வரும் டிஎன்பிஎல் காகித ஆலையில் பணியாற்றி வந்தவர் பிரகாசன். இவர் டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். இவர் மே 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா டிஎன்பிஎல் மனித வள அரங்கில் நடைபெற்றது. சிஐடியு நடத்தி வரும் சென்னை அயனாவரம் நிர்மல் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ.25 ஆயிரம் மற்றும் சிஐடியு சங்கத்திற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.35 ஆயிரத்தை டிஎன்பிஎல் தொழிலாளர் சங்க கெளரவ தலைவரும், சிஐடியு மாவட்டத் தலைவருமான ஜி.ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு ஆகியோரிடம் அவரது குடும்பத்தினர் வழங்கினர். கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஹோச்சுமின், ராஜேந்திரன், டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கச் செயலாளர் மகேஷ், தலைவர் அரவிந்த், துணைத் தலைவர் அ.காதர்பாட்சா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.