மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் வீரர்கள் இரண்டாயிரத்து 400 பேரை வாபஸ் பெறுவதாகவும் அந்நாட்டில் உள்ள தனது ராணுவ தளத்தை மூடப்போவதாகவும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் அறிவித்துள்ளார். இந்த பிரெஞ்சுப் படைகள் மாலிக்கு அருகில் உள்ள நைஜர் மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளுக்கு செல்கின்றன. 1990களில் மாலியின் ஜனாதிபதியாக ஆல்பா00,0 ஓமர் கோனாரே இருந்தார். அவர் ஒரு மார்க்சிஸ்ட் போராளி. 2 கோடி மக்களைக் கொண்ட மாலி, 30 லட்சம் டாலர் வெளிநாட்டு கடன் கட்ட வேண்டிய சுமை ஏற்பட்டது. மாலி ஒரு சிறிய நாடு. உலகின் 10 மிக வறிய நாடு களில் மாலியும் ஒன்று. கடன் தள்ளுபடி கோரி கோரினார். கடன்சுமை மாலியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என அவர் கூறினார். 2002ல் அவர் பதவி விலகி னார். அதற்குப் பிறகு கடன் சுமை மேலும் உயர்ந்தது. நேட்டோ படைகள் லிபியா மீது யுத்தம் தொடுத்தன. வடக்கு ஆப் பிரிக்காவில் தீவிரவாத குழுக்களுக்கு நிறைய ராணுவ ஆயுதங்கள் கிடைத்தன. வடக்கு மாலியில் உள்ள கலகக் கும்பலு டன் இந்த குழுக்கள் இணைந்து கலகம் செய்தன. இச்சூழ்நிலையில் 2013 இல் பிரான்ஸ் மாலியில் தலையிட்டது. தனது ராணுவ தளத்தை நிறுவியது. மௌரிடேனியா, மாலி ,நைஜர், நைஜீரியா ,சாட் ,சூடான், எரிட்ரியா ஆகிய ஆப்ரிக்க நாடுகள் அடங்கிய பிர தேசம் ‘ஷாகல்’ பிராந்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த பிராந்தி யத்தில் அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் நடைபெறுகின்றன. மாலியில் பிரான்சுக்கு எதிராக ஏராள மான போராட்டங்கள் நடைபெற்றன. அதனால்தான் பிரெஞ்சுப் படைகள் மாலியை விட்டு வெளியேறுகின்றன. வாக்னர் குரூப் என்கிற தனியார் ராணுவ கம்பெனியிலிருந்து 800 கூலிப்படைகள் மாலிக்கு வந்துள்ளன. இவர்கள் கொள்ளையடிக்க வந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி கூறுகிறார் . ஆனால் பிரான்ஸ், லிபியா மீதான யுத்தத்தின் போதும் மொசாம்பிக் வாக்னர் குரூப் படைகளை பயன்படுத்தியது.