tamilnadu

img

பல்லடம் அருகே பெண்கள் இருவர் உள்பட நான்கு பேர் கோரமாக வெட்டிப் படுகொலை

திருப்பூர், செப். 4 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வய தான பெண்கள் இருவர் உள்பட நான்கு பேர் கோரமான முறையில் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டனர்.இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறியிருப்பதாவது:  பல்லடம் வட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற இடத்தில் மோகன்ராஜ் (49) அவரது மனைவி கனகரத்தினம், மகன் பிரணவ் மற்றும், மோகன்ராஜின் தாயார் புஷ்ப வதி (68) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே மோகன்ராஜின் சித்தியான புஷ்பவதி யின் தங்கை ரத்தினம் (59), மோகன் ராஜின் தம்பி முறை உறவினர் செந்தில் குமார் (46) குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஞாயிறன்று மாலை மோகன்ராஜ் வீட்டிற்குச் செல்லும் வழித்தடத்தில் மூன்று பேர் அமர்ந்து மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த மோகன்ராஜ் இதைப் பார்த்து மூவரையும் திட்டி  அனுப்பியிருக்கிறார். இதன் பிறகு  இரவு 7.35 மணியளவில், ஏற்கெனவே வீட்டின் முன்பாக மதுபானம் குடித்த வர்கள் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் அங்கு வந்து மோகன்ராஜ் எங்கே  என்று கேட்டு உள்ளே வந்திருக்கின்ற னர். அப்போது குடும்பத்தினர் சேர்ந்து அவர்களை சத்தம் போட்டு வெளியே போகுமாறு சொல்லி இருக்கின்றனர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் தாயார் புஷ்பவதி, மகன் மோகன்ராஜ், சித்தி  ரத்தினம் ஆகியோரை அடுத்தடுத்து வெட்டியுள்ளனர். இவர்கள் கூச்ச லிட்டதைப் பார்த்து அருகாமையில் இருந்து அங்கு வந்த செந்தில்குமாரை யும் அவர்கள் அரிவாளால் வெட்டியிரு க்கின்றனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த மோகன்ராஜின் மனைவி கனகரத்தினம், மகன் பிரணவ் இரு வரும் தப்பி ஓடிச் சென்று வீட்டுக்குள் பூட்டிக் கொண்டனர்.

அரிவாளால் வெட்டப்பட்ட மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினம் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செந்தில்குமாரை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் உயிரிழந்தார். நான்கு பேரை கொலை செய்த மூன்று பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை யுண்டவர்கள் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் உள்பட  காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். இந்த அதிர்ச்சி தகவல் பரவியதை அடுத்து, கொலையுண்டவர்களின் உறவினர்கள், அந்த பகுதியைச் சேர்ந் தோர் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பாக குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்களன்று காலை மாநில தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பல்ல டம் எம்எல்ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வ ராஜ் உள்ளிட்டோர் பல்லடம் அரசு  மருத்துவமனைக்கு சென்று கொலை யானவர்கள் சடலங்களைப் பார்வை யிட்டு, உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தனிப்படைகள் அமைப்பு

பல்லடம் அரசு மருத்துவமனை முன்பாக காவல் துறையினர் குவிக்கப் பட்டனர். மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி உள்பட உயரதிகாரிகள் பல்லடத்தில் முகா மிட்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. பல்லடம் காவல் நிலையத்தில் மோகன்ராஜின் மனைவி கனகரத்தி னம் அளித்திருக்கும் புகார் மனுவில், கள்ளக்கிணறு பகுதியில் தனது கண வர் மோகன்ராஜிற்கும் அதே பகுதி யில் கோழிக்கடை நடத்தி வந்த, திரு நெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (எ) செல்வம் (27) என்பவ ருக்கும் முன்விரோதம் இருந்து வந்த தாக தெரிவித்துள்ளார். இதன் அடிப் படையில், காவல் துறையினர் விசார ணை செய்து, வெங்கடேஷ் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவ ட்டம் உத்தமபாளையம் அருகே முத்துலாபுரத்தைச் சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய மூவர் மீது  கொலை வழக்குப் பதிவு செய்துள்ள னர். இதில் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்துவை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர். தலை மறைவாக உள்ள மற்ற இருவரையும் பிடிப்பதற்கு தனிப்படைகள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட மோகன் ராஜ் மாதப்பூர் கிளை பாஜக நிர்வாகி யாக இருந்திருக்கிறார். எனவே பாஜக வை சேர்ந்தோர் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முன்பாக மறியலில் ஈடுபட்டனர். பொங்கலூர் ஒன்றிய அனைத்துக் கட்சியினர் கூட்டம் நடத்தி குற்ற வாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்று உயி ரிழந்தோர் சடலங்களைப் பார்வை யிட்டதுடன், உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். அத்துடன் கள்ளக்கிணறு கிராமத்திற்குச் சென்று அவர்களது வீட்டில் உறவினர் களுக்கும் இரங்கல் தெரிவித்தனர்.