தைபடிவ எரிபொருட்கள் வெளியேற்றும் நஞ்சுகள் மனித இனத்தை மலடாக்குகின்றன என்று சமீபத்தில் டேனிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குழந்தை பிறப்பு விகிதம் குறைய இவை காரணமாக இருக்கின்றன.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக குழந்தை பிறப்பு உலகளாவிய ரீதியில் குறிப்பாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குறைந்துள்ளது. இதனால் டென்மார்க் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பத்து குழந்தைகளில் ஒருவர் அங்கு நவீன தொழில்நுட்ப உதவியுடனேயே (assisted reproduction) பிறக்கின்றனர். 20 சதவிகிதத்திற்கும் மேல் ஆண்கள் அங்கு குழந்தைகளற்றவர்களாக வாழ்கின்றனர்.
தொழிற்புரட்சி காலத்திலிருந்தே
தொழிற்புரட்சி காலத்தில் இருந்தே குழந்தை பிறப்பு குறைய தொடங்கி யது என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் வருங்காலத்தில் வயதாகும் மனித குலத்தை கவனிக்க மிகச் சில இளம் தலைமுறையினர் மட்டுமே பூமியில் வாழும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் அஞ்சு கின்றனர். சூழல் சீரழிவு மற்றும் மனித இனப்பெருக்கத்திற்கு இடையில் இருக்கும் தொடர்புகள் பற்றி விஞ்ஞான உலகம் மிகக் குறைவாகவே அறிந்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏராளமான இளம் ஜோடி கள் ஏன் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றனர் என்பது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி நீல்ஸ் எரிக் கூறியுள்ளார். குழந்தை பிறப்பு குறித்த சர்வதேச நேச்சர் ரிவ்யூஸ் எண்டோ கிரைனா லஜி (Journal Nature Reviews endocrinology) என்ற ஆய்விதழில் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. பல சமயங்களில் குழந்தை பிறப்பு குறைவது பெற்றோராவதற்கு திட்டமிட உதவும் தொழில்நுட்பம், கருத்தடை வசதிகள், கருக்கலைப்பு வசதிகள், பெண்களின் கல்வியில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம், வேலைக்குச் செல்வதால் குழந்தை பிறப்பை தாமதப்படுத்து தல் போன்ற சமூகரீதியிலான பெண்களின் முன்னேற்றத்தால் ஏற்படும் சமூக மாற்றம், கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வசதிகள் வருவதற்கு முன்பே
கருத்தடை பிரிவில் நவீன வசதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே குழந்தை பிறப்பு விகிதம் குறையத் தொடங்கிவிட்டது. ஒட்டுமொத்த கருத்தரிப்பு சம்பவங்களில் ஏற்பட்ட குறைவு இதனை உறுதிப்படுத்துகிறது. 1990 முதல் பெண்கள் தானே முன் வந்து கருத்தரிப்பதில் 1 முதல் 2 விழுக்காடு குறைவு காணப்படு கிறது. உயிரியல் காரணங்களால் மனி தர்களிடம் மலட்டுத்தன்மை அதிக ரிக்கிறது. ஆண்டுதோறும் 74,000 பேர் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர். இது தவிர விந்தணுக் களின் குறைவு, அண்டத்தில் உரு வாகும் முட்டையின் தரக்குறைவு, இளம் பெண்களிடையே பிரசவ காலத்திற்கு முன்பே குழந்தை பிறப்பு மற்றும் இளம் ஆண் சிசுக் களில் அதிகரித்துவரும் மர பணுக்கோளாறுகள் போன்றவை உயந்துவருகிறது. மரபணுரீதியாக இதை ஆராய் வது பரிணாம மாற்றங்கள் உயிரி னங்களிடையே உருவாக அதிக காலம் எடுக்கும் என்பதால் புதை படிவ எரிபொருட்களால் மனித உட லில் ஏற்படும் நச்சுமாசு உருவாக்கும் இனப்பெருக்கரீதியிலான பாதிப்பு கள் குறித்து தீவிர ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று ஆய் வுக்குழுவைச் சேர்ந்த ஸ்காக்கி பெக் மற்றும் அவருடன் இணைந்த ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்ற னர்.
புதைபடிவ எரிபொருட்களை நம்பி இயங்கும் உலகம்
வாழ்க்கை புதைபடிவ எரிபொருட் களை ஆதாரமாகக் கொண்டே இயங்குகிறது. வளர்ச்சி என்று ஒருகாலத்தில் நம்பப்பட்ட இவை அனைத்தும் புதைபடிவ எரிபொருட்கள் மூலமே ஏற்பட்டுள்ளது. இந்த விதத்தில் மக்கள் சிந்திப்பதில்லை என்று ஸ்காக்கிபெக் கூறுகிறார். புதைபடிவ எரிபொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி செருப்பை நாம் வாங்கும் போது அவை சூழலிற்கும், நம் உடல்நலத்திற்கும் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்து எவரும் சிந் திப்பதில்லை என்று அவர் மேலும் கூறுகிறார். இதனால் பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரைச் சுற்றி லும் புதைபடிவ எரிபொருட்களால் உருவாக்கப்பட்ட நஞ்சு வேதிப் பொருட்கள் உள்ளன. இதன் மூலம் இந்த நஞ்சுகள் மனித உடலில் இரத்தம், சிறுநீர், விந்து சுரப்பின் போது சுரக்கும் திர வம், தாய்சேய் இணைப்புத் திசு பிளாசெண்டா), கொழுப்பு செல்கள் மற்றும் தாய்ப்பால் போன்றவற்றில் கலந்துள்ளன. பல புதைபடிவ எரி பொருள் மாசுகளும் மனித உடற் செயல்பாட்டைப் பாதிக்கும் நச்சுப் பொருட்கள் (endocrime disrupters). இவை உடலின் ஹார் மோன் சுரப்பில் குறுக்கீடு செய் பவை. இவை இனப்பெருக்க நலத் தில் எதிர்மறை விளைவுகளை ஏற் படுத்துகின்றன.
விலங்குகளில் ஆய்வு
விலங்குகள் மீது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பிளாஸ்டிக், ரசாயனப் பொருட்கள் போன்றவை அவற்றின் இனப்பெருக்கத்தைத் தாறுமாறாக்குகிறது. ஆனால் தார் மீகக் காரணங்களால் இது போன்ற ஆய்வுகளை மனிதர்கள் மீது மேற் கொள்ள முடியாது. என்றாலும் எலி கள், சுண்டெலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் புதைபடிவ எரி பொருட்களால் உருவான நஞ்சுகள் அவற்றின் இனப்பெருக்கத் திற னைப் பாதிப்பது கண்டறியப்பட் டுள்ளது என்று ஸ்காக்கிபெக் கூறு கிறார். இத்தகைய ஆய்வுகள் மனிதர் கள் மீது நடக்கும் காலம் வெகு தொலைவில் உள்ளது. ஆனால் இந்த நஞ்சுகள் ஆண்களிடம் இனப் பெருக்க உறுப்புகளில் நோய் ஏற் படக் காரணமாகலாம் என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்பு கின்றனர். இந்த நஞ்சுகள் ஆண் மற்றும் பெண் விலங்குகளில் வெவ் வேறு அளவில் பாதிப்பை ஏற் படுத்துகிறது என்று அறியப்பட்டுள் ளது. குறைந்த உடற்பயிற்சி, உடற் பருமன், புகைபிடித்தல், குடிப் பழக்கம், உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் போன்ற நவீன வாழ்க்கைமுறை உரு வாக்கும் பாதிப்புகளும் இத்தகைய ஆய்வுகளின்போது கணக்கில் எடுத்துக்கொள்லப்படவேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். புதைபடிவ எரிபொருட்கள் மூலம் உருவாகும் நஞ்சுகள் நாளை நம் இனத்தையே இல்லாமல் செய்துவிடும் அபாயம் ஏற்படுவ தற்கு முன் இது குறித்து தீவிர ஆய்வு கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்து கின்றனர்.