tamilnadu

img

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் காலமானார்

சென்னை,டிச.22- முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மருத்துவர் மஸ்தான் தஸ்தகீர் (66) சென்னையிலிருந்து காரில்  கூடுவாஞ்சேரி அருகே சென்று  கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி, வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரி ழந்தார். பிறகு, பிரேத பரிசோதனைக் காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூராய்வுகள் முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மஸ்தானின் உடல் திருவல்லிக் கேணி பாலாஜி நகரிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்  பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்  மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐடிசி  சோழா ஓட்டலில் வியாழனன்று (டிச.22) மாலை நடைபெறவிருந்த நிலையில் அவரது மரணம் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச் சியையும் ஏற்படுத்தியுள்ளது.  மஸ்தான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “சிறு பான்மையினர் நலன் மட்டு மின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப்  பணியாளரை இழந்து தவிக்கி றேன். மனித நேயராக, சமூக சேவ கராகவும் பணியாற்றிய மஸ்தான் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சிறு பான்மையினச் சகோதர, சகோதரி களுக்கும் எனது அனுதாபத்தை யும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.